*தமிழ்
வாழ்க்கை*
“அழைப்பு
மணிகள்
வேலை செய்யாவிட்டாலும்
வந்த யாரும் திரும்பிப்
போனதில்லை.
குளியலறைக்குத் தாழ்ப்பாள்
இல்லாத
இந்த ஒன்றரை வருடத்தில்
யாருடைய அந்தரங்கத்திற்கும்
அபாயம் நிகழ்ந்துவிடவில்லை.
நாற்காலியின் ஒடிந்த கால்
சிறு சமன் குலைவுக்குமேல்
விருந்தாளிக்கு
எந்த அவமதிப்பையும்
ஏற்படுத்தாது.
ஒரு வாரமாய்
பிரேக் சரியில்லாத
வாகனத்தில்தான்
கடந்து திரும்புகிறேன்
தெய்வம் துணையிருக்கும் இந்த
நகரத்தை.
அடிவயிற்றின் இடப்பக்க வலி
இப்போதெல்லாம் அடிக்கடி
வருகிறது
குறிப்பிட்ட கோணத்தில்
கொஞ்சம் படுத்துக் கொண்டால்
சமாளித்துக் கொள்ளலாம்.
எல்லா இடத்திலும்
சீர்படுத்த வேண்டியவை ஏராளம்
என்றாலும் சிக்கலற்றது
தமிழ் வாழ்க்கை..!”
*மனுஷ்யபுத்திரன்*
அருமை��
ReplyDelete