“கடையில்
பொருள் வாங்கி கொண்டு
தெருவில் ஓடி வரும் சிறுமி.
நாடக பாவனையில்
தனக்கு தானே
தலையை ஆட்டியபடியே
பேசி செல்கிறாள்.
ஒரு சிரிப்புடன்
அந்த சம்பாசனைக்குள்
நுழைத்து வெளியேறுகிறேன்
எதிரே வாகனத்தில்
செல்லும் நான்.
பெரு மகிழ்ச்சியடைகிறது
மனசு..!”