எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 26 October 2020

படித்ததில் பிடித்தவை (“காயத்ரி மந்திரம்” – கவிதாபாரதி கவிதை)

 


*காயத்ரி மந்திரம்*

 

காயத்ரி பற்றி கவிதை எழுதலாம்

எனில்

கவிதை வேறு...

காயத்ரி வேறா..?

 

காயத்ரிகள்

அழகாய்த்தான் இருக்கிறார்கள்...

அழகாய் இருப்பவரெல்லாம்

காயத்ரிகளாய் இருந்திருக்கக்கூடாதா..?

 

கால்கொலுசு,

கண்ணாடி வளையல்,

மஞ்சள் தாவணி,

இவை எதுவுமில்லாமல்

அழகாய் இருக்க

காயத்ரிக்கே சாத்யம்.

 

பெரும்பாலும் காயத்ரிகள்

காதலுக்கெட்டாத தூரத்தில்

சிரிக்கிறார்கள்.

 

எல்லாம் தெரிந்த காயத்ரிகளுக்கு

கொஞ்சம்

வெட்கப்படவும் தெரிந்திருக்கலாம்.

 

காயத்ரிக்கும்

காயத்ரிக்கும் நடக்கும் போட்டியில்

காயத்ரிகளே ஜெயிக்கிறார்கள்.

 

காயத்ரியைப் பிடிக்கும் என்பதற்கு

கண்ணம்மாவை

பிடிக்காது என்பதல்ல பொருள்.

 

காய்த்ரிகள் காயத்ரிகள்தான்

கல்யாணத்துக்கு

முன்னும் பின்னும்.

 

காயத்ரிக்குத்தான் தெரியும்

காயத்ரியாய் இருப்பதன்

கஷ்டம்..!”

 

*கவிதாபாரதி*


No comments:

Post a Comment