எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 29 October 2020

படித்ததில் பிடித்தவை (“நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்!” கண்டராதித்தன் கவிதை)

 


*நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்!*

 

நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்

யாரைப்போல இருப்பேனோ

நேற்று அவளை நான் பார்த்தேன்.

பேருந்தின் கடைசியில் நின்றிருந்த

அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்.

அந்த நாசி,

அந்தக் கண்கள்,

கருங்கூந்தல்,

மாநிறம்,

சற்றே திமிரான பார்வை

வடிவான தோற்றமென

நான் பெண்ணாய் பிறந்தால்

வடிவெடுக்கும் தோற்றம்தான் அது.

 

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்

பார்த்துக்கொண்டோம்.

 

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்

பார்ப்பதைத் தவிர்த்தோம்.

 

இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்

நீங்கள் இளங்கோவா?’ என்றேன்.

 

ஆமாம் என்ற அவள்

நீங்கள்

ஞானப்பூங்கோதைதானே?’ என்றாள்

 

*கண்டராதித்தன்*


No comments:

Post a Comment