எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 11 August 2020

படித்ததில் பிடித்தவை (“பெண்களின் தலையணை” – நா.முத்துக்குமார் கவிதை)



*பெண்களின் தலையணை*

ஏன் எல்லா பெண்களும்
தலையணை உறைகளில்
வாத்துகளையே
வரைகிறார்கள்..?

வாத்துகள் இறக்கை
இருந்தும்
அதிக உயரம் பறப்பதில்லை.
பிறந்த வீடு, புகுந்த வீடு
எனப் பெண்களை
போலவே...

தண்ணீருக்கும், தரைக்கும்
அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை..!

*நா.முத்துக்குமார்*

No comments:

Post a Comment