எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 21 August 2020

படித்ததில் பிடித்தவை (“வரிசை” – மணிகண்டபிரபு கவிதை)



*வரிசை*

மோதி மோதி
முடிந்தவரை முன்னே
நகர்த்துகிறோம்
வரிசையை.

எல்லோரையும்
உற்றுப்பார்த்து
முன் நிற்போரை
பின்பற்றி நகர்கிறோம்
எறும்பை போல.

புதிய வரிசை
உருவாகாமல் முடிந்தவரை
கற்போடு காப்பாற்ற
வேண்டியுள்ளது
வரிசையை.

கால் மாற்றியும்
கை கட்டியும்
சுவரையே பார்த்து
யார் நின்றாலும்

கடைசியில் நிற்பவரே
கட்டுக்குலையாமல்
பாதுகாக்கிறார் வரிசையை.

ஒரு வாக்குறுதியை
காப்பது போல்
இறுதிவரை
அடைகாக்க வேண்டியுள்ளது
வரிசையை..!

*மணிகண்டபிரபு*

No comments:

Post a Comment