எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 4 July 2020

படித்ததில் பிடித்தவை (“காடும்... மனிதனும்...” – நா.முத்துக்குமார் கவிதை)



*காடும்... மனிதனும்...*

முதல் மனிதன் உருவானபோது
காடு அவனை பயமுறுத்தியது.

இரண்டாம் மனிதன் உருவானபோது
காடு அவனுக்கு பழக்கமானது.

மூன்றாம் மனுதன் உருவானபோது
காடு அவனுக்கு கற்றுக் கொடுத்தது.

நான்காம் மனிதன் உருவானபோது
காடு அவனிடம் கட்டுப்பட்டது.

அடுத்தடுத்த மனிதர்கள் உருவானபோது
காடு அவர்களிடம் காயப்பட்டது..!

*நா.முத்துக்குமார்*

1 comment:

  1. kadu ipoludu kalavada patu kalavada patu., Kanamal poi kondirukiradu..!

    ReplyDelete