எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 24 July 2020

படித்ததில் பிடித்தவை (“நீர் தெளித்து விளையாடுதல்” – முகுந்த் நாகராஜன் கவிதை)



*நீர் தெளித்து விளையாடுதல்*

முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவுவிடுதியில்
சாப்பிட்டுவிட்டு
கைகழுவப்போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ் பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்துவிட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்..!

*முகுந்த் நாகராஜன்*

No comments:

Post a Comment