எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 28 December 2021

படித்ததில் பிடித்தவை (“கடவுள் டூரிஸ்ட் கைடாகிறார்” – வழிப்போக்கன் கவிதை)

 


*கடவுள் டூரிஸ்ட் கைடாகிறார்*

 

பக்தியின் பரவசத்தில்

எல்லோரும் பிராகாரத்தைச் சுற்றி

ஆலயத்தில் இறைவனைக் காண

அடித்துப் பிடித்து

மூலஸ்தானத்தின் முன்நின்றபடி

இருகைக் கூப்பி பிரார்த்தனை

செய்து கொண்டிருக்க

 

அந்தக் கோவிலில்

குழந்தையொன்று

பெற்றோர்களின்

கையை விட்டுவிட்டு

கடவுளின் தோள்மீது

கைபோட்டபடி

சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது

பஞ்சுமிட்டாய்க்காரனையும்,

பலூன்காரனையும்

 

கடவுள் அங்கே

தன் அவதாரம் மறந்து

குழந்தைக்கு டூரிஸ்ட் கைடாகிறார்..!

 

*வழிப்போக்கன்*




5 comments:

  1. சத்தியன்28 December 2021 at 10:08

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. செல்லதுரை28 December 2021 at 12:03

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்28 December 2021 at 12:04

    மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீதர்28 December 2021 at 12:05

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா28 December 2021 at 12:06

    கவிதை மிக மிக அருமை.

    ReplyDelete