எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 30 May 2020

படித்ததில் பிடித்தவை (“மீண்டு வாழவிருக்கிறது ஒரு பறவை” – சிவா கவிதை)


*மீண்டு வாழவிருக்கிறது ஒரு பறவை*
       
ஆகப்பெருஞ்சுமை
அதுவெனயெண்ணி
தன் மென்சிறகைப்
பெருவெறுப்பில்
பிய்த்தெறியும்
பறவையினெதிரில்,

ஒற்றைச் சிறகொன்று
மட்டுமது கொண்டு
தன்கடுஞ்சிறை தப்பும்
பறவையின் மீது
கண்பார்வைபட்ட தருணத்தில்
இதுவரை பிய்த்துத் துப்பிய
நம்பிக்கைகளைப்
பொறுக்கியெடுத்து
அதுமுதல் மீண்டு
வாழவிருக்கிறது
முதல் பறவை..!”

          *சிவா*

No comments:

Post a Comment