எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 19 May 2020

படித்ததில் பிடித்தவை (“தேடல்” – சிவசங்கரி கவிதை)


தேடல்

கடல் பார்க்க
போயிருந்த சிறுமி 
கரையில் அமர்ந்து
கைகளால் மணலை
அளைந்த பொழுது
விரல்களில் சிக்கிய
பழுப்புநிற அரைவட்ட
கிளிஞ்சல் ஒன்றை
வெகுநேரம்
உள்ளங்கையில் வைத்து
அழகு பாரத்தபின்

ஏதோ நினைத்தவளாய்
கடலில் வீசியெறிந்து
திரும்பினாள்,

தேடும் அலைகளின்
தேவையை தீர்த்துவைத்த
நிம்மதியில்...

    - சிவசங்கரி.

No comments:

Post a Comment