எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 18 May 2020

படித்ததில் பிடித்தவை (“காற்றின் வீடு” – ஜெயமோகன் கவிதை)


காற்றின் வீடு

கைவிடப்பட்ட வீட்டின் உள்ளே
காற்றுதான் நுழைய துணிகிறது.
இயல்பாக தன்னந்தனியாக
சன்னல் கதவை அசைத்துக்கொண்டு
உள்ளே செல்கிறது.
சுவர்களை வருடியபடி
காலியான அறைகள் தோறும்
ஒழுகிச்செல்கிறது.
ஒட்டடைகள் மீது
மெல்ல ஊதி அதிரச்செய்கிறது.
தரையின் குப்பைகளை அள்ளி
சுவரோரமாகக் கூட்டுகிறது.
பயனிழந்துபோன அனைத்தையும் தொட்டு
மர்மமாகச் சிரித்துக்கொள்கிறது.
வெளியேறும் முன்பு
தூசுப்படலத்தின் மென்மைமீது
தன் விரல்களால்
எதையோ கிறுக்கிச் செல்கிறது.”

         -  ஜெயமோகன்.

No comments:

Post a Comment