எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 20 May 2022

படித்ததில் பிடித்தவை (“தனி தனி குழந்தைகள்” – ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை)

 


*தனி தனி குழந்தைகள்*

 

அன்று நண்பகலில்

கம்பர் தெருவில் இருக்கும்

அடுக்குமாடிக் குடியிருப்பின்

முதல் தளத்து வீட்டின்

ஜன்னல் கம்பிவலையில்

தோன்றிய முகம் முதலில்

ஏதோவொரு நீர்வண்ண ஓவியமாகவே தோன்றியது

 

ஜன்னல்கள் வழியாக

உள்ளிருந்து வேடிக்கை பார்க்கும்

முகங்களை

சமீபமாக

வீடுகளில் நான் பார்க்கவேயில்லை

அதனால் அந்தச் சித்திரத்தை

ஊன்றிப் பார்த்தேன்

 

கம்பி வலையில் பதித்து

தெருவை வெறித்துக் குத்திப் பார்த்திருந்த

கண்கள்

மூன்று வயது குழந்தையுடையது

 

உதடு தடித்து கண்கள் பழுத்து

ஓரங்களும்

கனவுகளற்று அழுந்தியிருந்த

அந்த முகத்தில்

ஆட்டிசம் உருகிக் கொண்டிருக்கிறது

 

குட்டிப்பையா

குட்டிப்பாப்பா

மதி இறுகிய ஊர் இது

மதி இறுகிய தெரு இது

நீயும் நானும்

உள்ளேயும் வெளியேயும்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்

தனி தனி

குழந்தைகள்..!

 

*ஷங்கர்ராமசுப்ரமணியன்*



5 comments:

  1. சத்தியன்20 May 2022 at 07:42

    🤝🙏👌🏻👏

    ReplyDelete
  2. செல்லதுரை20 May 2022 at 07:42

    👌👌

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்20 May 2022 at 11:04

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. சீனிவாசன்20 May 2022 at 15:07

    👌👌👌

    ReplyDelete