எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 16 April 2021

படித்ததில் பிடித்தவை (“கடவுள் விளையாட்டு” – மதார் கவிதை)

 


*கடவுள் விளையாட்டு*

 

பிரார்த்திக்கும் அம்மாவின்

முந்தானையைப் பிடித்திழுக்கும் குழந்தை.

கண்ணாமூச்சி விளையாட்டின்

மூன்றாம் நபர் போல

கடவுள் உதட்டில் கைவைத்துப் புன்னகைக்கிறார்.

குழந்தை புன்னகைத்தபடியே கடவுளைப் பார்க்கிறது.

 

அம்மா கண் திறக்கவும்

கடவுள் விளையாட்டிலிருந்து

காணாமல் போகிறார்..!

 

*மதார்*

(வெயில் பறந்தது)




5 comments:

  1. சத்தியன்16 April 2021 at 09:10

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நந்தகுமார்16 April 2021 at 09:18

    அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா16 April 2021 at 11:31

    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்16 April 2021 at 11:34

    மிக அருமை.

    ReplyDelete
  5. Superb.
    Sema rasanai.

    ReplyDelete