எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 11 April 2021

படித்ததில் பிடித்தவை (“சாப்பாடில்லாத பிள்ளைகள்” – கலாப்ரியா கவிதை)

 

(ஓவியம்: இளையராஜா)


*சாப்பாடில்லாத பிள்ளைகள்*

 

சாப்பாடில்லாத பிள்ளைகள்

புழுதிக் காலுடன்

அடுப்பெரிகிறதா

என்பதை

வந்து வந்து

பார்த்து விட்டு

விளையாடப்போகும்,

பசியை வாசல்படியிலேயே

விட்டுவிட்டு..!

 

*கலாப்ரியா*



8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கலாப்ரியா*
    (பிறப்பு: சூலை 30, 1950)
    தமிழின் நவீன கவிஞர்களில்
    குறிப்பிடத்தக்கவர்.
    எழுபதுகளில் எழுதத்
    தொடங்கியவர்.

    கலாப்ரியாவின்
    இயற்பெயர் சோமசுந்தரம்.
    சிறு வயதில் எம்.ஜி.ஆர்
    ரசிகனாய் தி. மு. க.
    தொண்டனாக தீவிரமாக
    இயங்கினார்.

    அறிஞர் அண்ணாவின்
    இரங்கல் கூட்டத்திற்காக
    முதன்முதலில் கவிதை
    (இரங்கற்பா) எழுதிய
    சோமசுந்தரம்,
    வண்ணநிலவனின் கையெழுத்து
    இதழான பொருநையில் கவிதை
    எழுதும் போது தனக்குத் தானே
    'கலாப்ரியா' என்று பெயர்
    சூட்டிக்கொண்டார்.
    பின்னர் 'கசடதபற'-வில்
    கவிதைகள் வெளிவரும்போது
    கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
    'கசடதபற'-விற்கு பின்
    வானம்பாடி, கணையாழி, தீபம்
    ஆகிய இதழ்களில் எழுதினார்.
    கலாப்ரியாவின் கவிதைகளில்
    பாலுணர்வு வெளிப்பாடுகளும்
    சில வேளைகளில் வன்முறையும்
    கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது
    என்று சிலரும், இது அவரது
    கவிதை மாந்தர்கள் வாழ்வை
    ஒட்டியது என்று சிலரும்
    கருதுவதுண்டு
    {பேராசிரியர் தமிழவன்
    படிகள் இதழில் எழுதிய கட்டுரை,
    ஜெயமோகன், கலாப்ரியா
    கவிதைகள் தொகுப்புக்கு
    எழுதியுள்ள முன்னுரைகள்}.

    நெல்லை மாவட்டம்
    கடையநல்லூரில் வங்கிப் பணி
    நிறைவு பெற்றவர்.
    தன்னை சுற்றி நிகழும்
    விஷயங்களை கவிதைகளில்
    பதிவு செய்து வருகிறார்
    'கலாப்ரியா'.

    ReplyDelete
  2. சத்தியன்11 April 2021 at 07:05

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சந்திரன்11 April 2021 at 10:23

    நான் இதை அனுபவித்து இருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கிராமத்தில்
      வளர்ந்த எல்லா
      குழந்தைகளுக்கும்
      இந்த அனுபவம்
      கண்டிப்பாக
      வாய்த்திருக்கும்.

      கவிதைகள்
      நமது அனுபவத்தை
      தொட்டு செல்லும் போது
      தோன்றும் உணர்ச்சி
      அபூர்வமானது..!

      கவிதைப் பற்றிய
      தங்கள் பதிவுக்கு
      நன்றி..!

      Delete
  4. கெங்கையா11 April 2021 at 10:25

    கவிதை அருமை..!
    கவிஞருக்கு பாராட்டுக்கள் பல.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்11 April 2021 at 20:29

    மிக அருமை.

    ReplyDelete
  6. Tears of Joy.

    ReplyDelete