“எவ்வளவோ சொல்லியும்
கேட்கவில்லை...
அவரது வீட்டு எல்லைக்குள்
கிளைகள் பரப்பிய
மாமரத்தை வெட்டச்சொல்லி
அடம் பிடித்தார்
பின் வீட்டுக்காரர்..!
இலைகள் விழுவதாகவும்...
கொசுக்களும், பூச்சிகளும்
படையெடுப்பதாகவும்...
பறவைகள் எச்சமிடுவதாகவும்...
அடுக்கிக் கொண்டே போனார்
வெட்டுவதற்கான காரணங்களை.
உயிர் வாழ பிராண வாயு
கொடுக்கும் அற்புதமும்...
வெயிலின் உக்கிரத்தை
குறைக்கும் மகத்துவமும்...
இலைகள் மக்கி
மண்வளமாகும் மகிமையும்...
காயும், கனியும்
பகிர்ந்துக் கொள்ளும்
அண்டை வீட்டின் அருமையும்...
எடுத்து சொன்னப் பிறகும்
ஏற்கவில்லை அவர் மனம்.
இரண்டாம் சனிக்கிழமை
அவர் மனதை மாற்ற
கடைசி முயற்சியும்
தோல்வியுற்றதால்
ஞாயிற்றுக்கிழமை
அவர் வீட்டு பக்கம் செல்லும்
கிளைகளை மட்டும்
வெட்டுவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது மனமில்லாமல்.
கிளைகள் வெட்டப்பட்ட
மரத்தைப் பார்க்க
சங்கடமாகவே இருந்தது.
துக்கத்தில் அன்றிரவு
தூக்கம் வரவில்லை.
அடுத்த நாள் காலை
மாமரத்தை வருத்தத்துடன்
அன்னார்ந்து பார்த்தேன்.
கம்பீரமாக நின்றது
அந்த மரம்.
வேலைக்கு செல்லும் போது
ரயில் நிலைய வாயிலில்
கைகளை இழந்த
பிச்சைக்காரரைப்
பார்க்கும் போது
ஏனோ பின் வீட்டுக்காரர்
நினைவுக்கு வந்தார்..!”
*கி.அற்புதராஜு*
அருமை தங்கள் தாக்கம்
ReplyDeleteNice.
ReplyDeleteதன் குழந்தையை தன் கையாலே பின்னப்படுத்திய வேதனை மரத்தை வளர்த்தவருக்கு. பிச்சைக்காரரின் உண்மையில் அதனை வெளிப்படுத்தியது மிக அழகு.
ReplyDeleteVery nice ��
ReplyDeleteSuperb.
ReplyDeleteஉண்மையில் ஊனமானவர் பின் வீட்டுக்காரர்தான் என பிச்சைக்காரர் மூலம் தெளிவுப்படுத்தியது அருமை..!
ReplyDeleteஅருமை
DeleteArumai
DeleteSir,
ReplyDeleteSuper.
👍
ReplyDelete😃
ReplyDelete👍
ReplyDelete😢
ReplyDelete👍
ReplyDelete👌🏻😊
ReplyDeleteஅருமை.
👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👍
ReplyDelete🙏
ReplyDeleteஐயா தாங்கள் கூறியது போல் எனக்கும் இந்த அனுபவம் உண்டு கடந்த மாதம் எனது சொந்த ஊர் வலங்கைமானில் மாமரத்தின் கிளையை மட்டுமல்ல இல்லை மரத்தையே வெட்டி விட்டேன் என்ன சொல்வது.
ReplyDelete👍
ReplyDeleteஅருமை
ReplyDelete👌👌
ReplyDelete👏
ReplyDelete👏
ReplyDeleteஉண்மை சம்பவம்
ReplyDeleteபோல் தெரிகிறது...
கவிதை வரிகள்
அருமை.
Great Sir.
ReplyDeleteGood one, Sir.
ReplyDeleteAlways avail
ReplyDeleteNature's love
and
gift by God.
💐💐🌹💐💐
Super sir.
ReplyDeleteசுயநல கிருமிகள்
ReplyDelete👏👌
ReplyDelete😢
ReplyDelete👍
ReplyDeleteSuper sir
DeleteSuper sir 🙏
Delete👌
ReplyDeleteVery nice xD
ReplyDeleteமரம் வளர்ப்போம் உயிர் காப்போம் அருமை .
ReplyDelete🩷
ReplyDelete👌
ReplyDelete👌
ReplyDeleteபசுமையை பேணுவோம்.
ReplyDelete👍
ReplyDelete