எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 6 December 2020

*அன்பின் கிளைகள்*

 


எவ்வளவோ சொல்லியும்

கேட்கவில்லை...

அவரது வீட்டு எல்லைக்குள்

கிளைகள் பரப்பிய

மாமரத்தை வெட்டச்சொல்லி

அடம் பிடித்தார்

பின் வீட்டுக்காரர்..!

 

இலைகள் விழுவதாகவும்...

கொசுக்களும், பூச்சிகளும்

படையெடுப்பதாகவும்...

பறவைகள் எச்சமிடுவதாகவும்...

அடுக்கிக் கொண்டே போனார்

வெட்டுவதற்கான காரணங்களை.

 

உயிர் வாழ பிராண வாயு

கொடுக்கும் அற்புதமும்...

வெயிலின் உக்கிரத்தை

குறைக்கும் மகத்துவமும்...

இலைகள் மக்கி 

மண்வளமாகும் மகிமையும்...

காயும், கனியும்

பகிர்ந்துக் கொள்ளும்

அண்டை வீட்டின் அருமையும்...

எடுத்து சொன்னப் பிறகும்

ஏற்கவில்லை அவர் மனம்.

 

இரண்டாம் சனிக்கிழமை

அவர் மனதை மாற்ற

கடைசி முயற்சியும்

தோல்வியுற்றதால்

ஞாயிற்றுக்கிழமை

அவர் வீட்டு பக்கம் செல்லும்

கிளைகளை மட்டும்

வெட்டுவதற்கு ஏற்பாடு

செய்யப்பட்டது மனமில்லாமல்.

 

கிளைகள் வெட்டப்பட்ட

மரத்தைப் பார்க்க

சங்கடமாகவே இருந்தது.

துக்கத்தில் அன்றிரவு

தூக்கம் வரவில்லை.

 

அடுத்த நாள் காலை

மாமரத்தை வருத்தத்துடன்

அன்னார்ந்து பார்த்தேன்.

கம்பீரமாக நின்றது

அந்த மரம்.

 

வேலைக்கு செல்லும் போது

ரயில் நிலைய வாயிலில்

கைகளை இழந்த

பிச்சைக்காரரைப்

பார்க்கும் போது

ஏனோ பின் வீட்டுக்காரர்

நினைவுக்கு வந்தார்..!”

 

*கி.அற்புதராஜு*


43 comments:

  1. அருமை தங்கள் தாக்கம்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்6 December 2020 at 08:21

    தன் குழந்தையை தன் கையாலே பின்னப்படுத்திய வேதனை மரத்தை வளர்த்தவருக்கு. பிச்சைக்காரரின் உண்மையில் அதனை வெளிப்படுத்தியது மிக அழகு.

    ReplyDelete
  3. Very nice ��

    ReplyDelete
  4. கவிதா ராணி31 December 2020 at 18:53

    உண்மையில் ஊனமானவர் பின் வீட்டுக்காரர்தான் என பிச்சைக்காரர் மூலம் தெளிவுப்படுத்தியது அருமை..!

    ReplyDelete
  5. Venkatesh Pandarinathan23 December 2024 at 08:51

    👍

    ReplyDelete
  6. செல்லதுரை23 December 2024 at 08:51

    😢

    ReplyDelete
  7. மோகன்தாஸ். S23 December 2024 at 08:52

    👍

    ReplyDelete
  8. கார்த்தி23 December 2024 at 08:53

    👌🏻😊
    அருமை.

    ReplyDelete
  9. வெங்கட்ராமன், ஆம்பூர்.23 December 2024 at 08:54

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  10. ரவிசந்திரன்23 December 2024 at 09:05

    👍

    ReplyDelete
  11. சதீஷ், விழுப்புரம்.23 December 2024 at 09:15

    🙏

    ReplyDelete
  12. ஐயா தாங்கள் கூறியது போல் எனக்கும் இந்த அனுபவம் உண்டு கடந்த மாதம் எனது சொந்த ஊர் வலங்கைமானில் மாமரத்தின் கிளையை மட்டுமல்ல இல்லை மரத்தையே வெட்டி விட்டேன் என்ன சொல்வது.

    ReplyDelete
  13. வெங்கட், வைஷ்ணவி நகர்.23 December 2024 at 09:24

    👍

    ReplyDelete
  14. அருமை

    ReplyDelete
  15. ஜெயராமன்23 December 2024 at 09:40

    👌👌

    ReplyDelete
  16. அருள்ராஜ்23 December 2024 at 09:52

    👏

    ReplyDelete
  17. ஆறுமுகம்23 December 2024 at 11:22

    உண்மை சம்பவம்
    போல் தெரிகிறது...
    கவிதை வரிகள்
    அருமை.

    ReplyDelete
  18. Great Sir.

    ReplyDelete
  19. Good one, Sir.

    ReplyDelete
  20. Always avail
    Nature's love
    and
    gift by God.
    💐💐🌹💐💐

    ReplyDelete
  21. சுயநல கிருமிகள்

    ReplyDelete
  22. அம்மையப்பன்23 December 2024 at 12:40

    😢

    ReplyDelete
  23. பாலசுப்ரமணியன்23 December 2024 at 13:47

    👍

    ReplyDelete
  24. மரம் வளர்ப்போம் உயிர் காப்போம் அருமை .

    ReplyDelete
  25. செல்வம். K.P28 December 2024 at 08:01

    👌

    ReplyDelete
  26. ஸ்ரீராம்28 December 2024 at 12:03

    பசுமையை பேணுவோம்.

    ReplyDelete