எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 19 November 2013

*இடைவெளி*



வெளியூரில் உள்ள

கல்லூரியில்        

மகனை சேர்த்து 

ஹாஸ்டலில் 

விட்டு வந்த 

தாய்தந்தை... 


வீட்டுக்கு திரும்பியவுடன் 

நடந்தவற்றை தந்தை 

தன்னுடன் பணிபுரியும் 

அலுவலக நண்பருக்கு 

விலாவாரியாக 

விவரித்துக்கொண்டிருந்தார் 

தொலைபேசியில்... 


பேரனைப் பற்றிய 

உரையாடலை 

வராந்தாவிலிருந்த 

தாத்தாவும்பாட்டியும் 

கேட்டுக் கொண்டிருந்தனர்..!

 

 *கி.அற்புதராஜு*

38 comments:

  1. அவ்வளவு தான் தாத்தா பாட்டியின் முக்கியத்துவம். அருமையான நிகழ் கால பதிவு.

    ReplyDelete
  2. சத்தியன்28 February 2021 at 08:56

    அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்28 February 2021 at 11:37

    தற்போதைய
    சூழ்நிலையில்
    பெற்றவர்களுக்கு
    மகன்கள் அளிக்கும்
    மரியாதையை!
    அழகாக விளக்கும்
    கவிதை.
    நெஞ்சை தொட்டது.

    ReplyDelete
  4. feeling lonely.

    ReplyDelete
  5. நல்ல தலைப்பு. வீட்டுக்கு வந்ததும் அவர் சொல்லவும் இல்லை, இவர்கள் கேட்கவும் இல்லை. அந்த இடைவெளி ஏன் எப்படி வந்தது என்று நம் மனதில் விரிகிறது கவிதை.

    ReplyDelete
  6. இன்றைய உலகின் யதார்த்தத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது.
    வயதான பெற்றோரின் உணர்வுகள் மற்றும் அவர்களுக்கும் அவர்களது மகனின் குடும்பத்திற்கும் இடையே உள்ள உணர்ச்சி இடைவெளியை அழகாக விவரிக்கிறது.

    மாறிவரும் காலங்கள் மற்றும் உறவுகளின் சிந்தனையைத் தூண்டும் பிரதிபலிப்பு இது.

    அருமை சார் மற்றும் பகிர்ந்தமைக்கு நன்றி 💐🙏

    ReplyDelete
  7. இந்த இடைவெளிதான் உறவுகளை உணரவைகின்றது

    ReplyDelete
  8. மலரும் நினைவகள்🙏👌💐

    ReplyDelete
  9. அலுவலக நண்பர் உடன் பகிர்ந்து கொள்ளும் போது, தாத்தா பாட்டி தெரிந்து கொள்ள வேண்டிய காலமாக மாறிவிட்டது தற்போது.

    ReplyDelete
  10. கெங்கையா18 January 2025 at 09:39

    அருமை...
    மிக அருமை...
    நன்றி..!

    ReplyDelete
  11. எதார்த்தம்

    ReplyDelete
  12. Thiruvadi Sankar18 January 2025 at 10:51

    இடைவெளி மிக அருமையாக எடுத்து கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  13. எதார்த்தம்

    ReplyDelete
  14. எதார்த்தம்

    ReplyDelete
  15. சங்கரன்18 January 2025 at 18:36

    😔

    ReplyDelete
  16. வெங்கட், வைஷ்ணவி நகர்.18 January 2025 at 18:37

    👍

    ReplyDelete
  17. சுகிர்தா .J18 January 2025 at 18:38

    🩷

    ReplyDelete
  18. அருள்ராஜ்18 January 2025 at 18:39

    👏

    ReplyDelete
  19. கலைச்செல்வி18 January 2025 at 18:39

    👌

    ReplyDelete
  20. அம்மையப்பன்18 January 2025 at 18:40

    வணக்கம்...
    தாத்தா பாட்டி.
    💐🙏❤

    ReplyDelete
  21. பிரபாகரன்18 January 2025 at 18:42

    🙏

    ReplyDelete
  22. செல்வம் K.P18 January 2025 at 18:42

    👌

    ReplyDelete
  23. ரவிசந்திரன்18 January 2025 at 18:43

    👍

    ReplyDelete
  24. ராஜாராமன்18 January 2025 at 18:44

    🙏

    ReplyDelete
  25. சதீஷ், விழுப்புரம்.18 January 2025 at 18:44

    🙏

    ReplyDelete
  26. செல்லதுரை18 January 2025 at 18:46

    😢

    ReplyDelete
  27. மோகன்தாஸ் .S18 January 2025 at 18:47

    "இடை....... வெளி"
    சூப்பர்.
    👍👏

    ReplyDelete
  28. வெங்கட்ராமன், ஆம்பூர்.18 January 2025 at 18:49

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  29. பெற்ற பாசம் சும்மா சும்மாவா, மகன் பாசத்தை அறிந்து, நன்கு படித்தால் சிறப்பு. பெயரெடுக்கும் பிள்ளையாக வர வேண்டும் !!பெயரைக் கெடுக்கும் பிள்ளையாக வந்து விடக்கூடாது.

    ReplyDelete
  30. தனசேகர்19 January 2025 at 09:18

    தலைமுறை இடைவெளி
    மற்றும் பொருளாதார
    சுயசார்பு சிந்தனை
    என்பதன் பிண்ணனியிலேயே
    இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தனசேகர்5 February 2025 at 08:07

      வணக்கம்.
      தாங்கள் எனக்கு அனுப்பி வைக்கும் கருத்துக்களின் அடிநாதமான மெல்லிய மனித உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்துகிறுர்கள்.
      வாழ்த்துக்கள்.
      அதேநேரத்தில் இன்னும் கவித்துவமாக, சிலேடையாக, எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

      Delete
    2. காலை வணக்கம்.

      தங்களின் கருத்துக்கு
      மிக்க நன்றி.

      புதுக்கவிதையின் வளர்ச்சியில்...
      கவிதைக்கான எதுகை
      மோனை தவிர்க்கப்பட்டு,
      காணும் காட்சியினை
      அலங்கார வார்த்தைகளின்றி,
      உள்ளதை உள்ளபடியே எளிய
      தமிழ்ச் சொற்கள் கொண்டே
      எழுதப்படும் சிறு சம்பவங்கள்
      இப்போது கவிதைக்கான
      கட்டுக்குள் வந்து விடுகிறது.

      கவித்துவம், சிலேடை
      எழுத்துகளை இப்போது
      எழுதும் புதுக்கவிதைகளில்
      கவிஞர்கள் பயன்
      படுத்துவதில்லை.

      இத்தனை அடிகள்தான்
      எழுதப்பட வேண்டும் என்ற
      வரையறை இல்லை.

      ஒவ்வொரு அடியிலும்
      குறிப்பிட்ட சீர்கள் இருக்க
      வேண்டுமென்ற வரையறை
      இல்லை.

      சொற்சுருக்கம் இருக்க
      வேண்டியது
      புதுக்கவிதைக்கான முக்கிய
      அம்சம்.

      பேச்சுவழக்குச்
      சொற்களிடையே ஒலிநயம்
      காணப்படுவது பொதுவானது.

      சொற்கள் சிறப்பாகப்
      பயன்படுத்தப்படுவதும்
      வடமொழி, ஆங்கிலம்,
      பேச்சுவழக்குச் சார்ந்த
      சொற்களுக்கும்
      பாவிக்கப்படுகிறது.

      எதுகை, மோனை, இயைபு
      என்னும் தொடை
      நயங்களெல்லாம் கட்டாயம்
      என்ற நிலையில்லை.

      அடிவரையறை செய்து
      எழுதும்போது மரபுக்கவிதை
      போன்று இது
      தோற்றமளிக்கும்.

      வசன நடையும் உரையாடல்
      பாங்கும் சிறப்பாக எளிய
      முறையில் பாவிக்கப்படும்.

      🙏

      Delete
  31. மஹாலெஷ்மி19 January 2025 at 10:37

    👌

    ReplyDelete