எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 13 July 2022

படித்ததில் பிடித்தவை (“அகாலம்” – ஆனந்த் கவிதை)

 


*அகாலம்*

 

ஒரு இலை உதிர்வதால்

மரத்துக்கு ஒன்றுமில்லை.

 

ஒரு மரம் வெட்டப்படுவதால்

பூமிக்கு ஒன்றுமில்லை.

 

ஒரு பூமி அழிவதால்

பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை.

 

ஒரு பிரபஞ்சம்

போவதால்

எனக்கு ஒன்றுமில்லை..!

 


*ஆனந்த்*

No comments:

Post a Comment