எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 10 July 2022

*எதிர் எதிர் இனிமா*

 


குறுகியப் பாதையில்

எதிர் எதிரே வரும் இருவர்.

 

இருவரும் எதிர்கொள்ளும்

சிறிய தூரத்திலிருந்தே

ஒரே நேரத்தில்

வலப்புறம் எதிர் எதிரே...

இடப்புறம் எதிர் எதிரே...

என்று கடக்கும் திசையை

ஒரே மாதிரியாக

தீர்மானிக்கிறார்கள்.

 

கடைசியில்

ஒருவர் மட்டும்

ஒரே இடத்தில் நின்று,

நீங்க போங்க...

என்று செல்லும் போது

இருவருக்குள்ளும்

பொங்கும் சிரிப்பு

அவ்வளவு அழகு..!

 

*கி.அற்புதராஜு*

9 comments:

  1. விட்டுக் கொடுத்து மகிழ்வோம்

    ReplyDelete
  2. விட்டு கொடுப்பதிலும் மகிழ்ச்சி தான்

    ReplyDelete
  3. செல்லதுரை10 July 2022 at 09:06

    மிக அருமை.

    ReplyDelete
  4. K. பாலாஜி10 July 2022 at 09:46

    👍👌

    ReplyDelete
  5. கெங்கையா10 July 2022 at 10:39

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்10 July 2022 at 12:57

    விட்டுக் கொடுத்தல்
    என்றும் ஆனந்தமே!

    ReplyDelete
  7. பிருந்தா10 July 2022 at 13:03

    இக்கவிதையில்
    விட்டுக் கொடுத்தலை விட
    இருவரும் ஓரே திசையில்
    கடக்க முயற்சிக்கும் நிலை
    எல்லோரும் சந்திப்பதுதான்.
    அதை அழகாக
    சித்தரிக்கிறது கவிதை.
    அருமை.

    ReplyDelete
  8. மிதிலா. S11 July 2022 at 12:05

    அருமை.

    ReplyDelete
  9. நரசிம்மன் R.K18 July 2022 at 10:40

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete