எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 27 May 2014

படித்ததில் பிடித்தவை (யூமா. வாசுகி கவிதை)

                                                                                     
“அத்தனை பேர் கூடி
ரயிலுக்குக் காத்திருக்கையில்
என்னிடம் மட்டும் பிரியம் வைத்து
ஒரு காக்கை
தலை தட்டிச் சென்றதும்
கேன்டினில் கொஞ்சம்
தண்ணீர் வாங்கி
சனி கழிய
தலையில் தெளித்துப் போவென
பரிவாகச் சொன்னாள்
பெண்ணொருத்தி..!”
                                                           -   யூமா. வாசுகி.

(கவிதை தொகுப்பு: இரவுகளின் நிழற்படம்)

No comments:

Post a Comment