சாபம்
‘படகுக் கவிழ பிராத்திக்கிறாயே...’ என்று
எனக்கு சாபம் விட்டுச்சென்ற நீங்கள்
மீதிக் கதையையும்
கேட்டுப் போயிருக்கலாம்...
நீண்ட காலமாக கரை திரும்பாத
அந்த ஆளற்ற படகில்
நடுத்தர வயது மீனொன்று
துள்ளிக் குதித்து துடிதுடிக்கிறது..!
-
முத்துராசா குமார்.
(“பிடிமண்” கவிதைத் தொகுப்பிலிருந்து...)
👍
ReplyDelete