எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 10 April 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தைகளின் கிறுக்கல்” – தமிழ் இயலன் கவிதை)


*குழந்தைகளின் கிறுக்கல்*

சபிக்கப்பட்ட
செங்கற்களால்
நிரம்பியவை
குழந்தைகளின்
கிறுக்கல் இல்லாத
வீட்டுச்சுவர்கள்.

பிஞ்சு விரல்கள்
அஞ்சிக்கிடக்கும்
இல்லங்களில்
பிகாசோ மறுபடியும்
புதைக்கப்படுகிறான்.

மறு வண்ணப்பூச்சுக்கான
செலவுக்கணக்கில்
மறையக் கூடும்
புதிய டாவின்சியின்
அறிவியல் கோடுகள்.

வண்ணத்தூரிகைகள்
வாங்கப்படா வீடுகளில்
தீண்ட மறுக்கிறோம்
மைக்கேல் எஞ்சலோவை.

வாடகை வீடு என
மிரட்டப்பட்ட
கரங்களிடையே
மருண்டு மறைகிறான்
இன்றைய வான்கோ.

சுவர் மறுத்தாலும்
தாள் கொடுத்தாவது
கிறுக்கவிடுங்கள்.
வெளிப்படட்டும் மனம்.
வெற்றியடையட்டும் திறன்.

குறுக்கே நிற்காதீர்கள்
கிறுக்கர்களே..!”
                                                                    

                   - தமிழ் இயலன்.

No comments:

Post a Comment