படித்ததில் பிடித்தவை (கவிதை)
குழந்தை கனவு
“நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்
செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்
நம்முடைய 
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.
அதை ரசிக்கும் 
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
                  -  ந. சிவநேசன்.
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment