எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 2 October 2021

படித்ததில் பிடித்தவை (“யாருமில்லாதொரு ராஜ்ஜியம்” – ராம் வசந்த் கவிதை)

 


*யாருமில்லாதொரு  ராஜ்ஜியம்*

 

தன் அப்பாவின்

சிகரெட்டில் ஒன்றையுருவி

இதான் கடைசி தடவை

எனக் கொடுக்கும் சித்தி மகள்.

 

ஆத்துல உம்ம தேவதை

துணி துவைச்சிட்டு இருக்கு

தகவல் தரும் அண்ணி.

 

மாப்ள நீ சிங்கமடா

பயந்த என்னைத் தாங்கி

நீச்சல் பழக்கிய தாய்மாமன்.

 

அவிங்கள வெட்டனும்

பன்னெண்டு போடறா அப்பு

தாயக் கூட்டாளி பெரியம்மா.

 

முள் எடுத்த மீன்களை

மகன் தட்டிலிருந்து எனக்கு

பரிமாற்றம் செய்யும் அத்தை.

 

அண்ணன் மவன் என்னைய வச்சு

டபுள்ஸ் அடிக்கிறான்லே

சொல்லி வியக்கும் சித்தப்பா.

 

இப்படி யாருமில்லாதொரு

ராஜ்ஜியத்தில்

தன்னைத்தானே

செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறான்

என் மகன்..!

 

 *ராம் வசந்த்*

No comments:

Post a Comment