எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 April 2014

சமநிலை பெறுதல்...

                   

அலுவலகத்தில் அவசர வேலை
மூன்றாவது மாடியிலிருந்து
இரண்டாவது மாடிக்கு
இரண்டு இரண்டு படிகளாக
வேகமாக இறங்கும் நான்...

முன்னால் மாற்று திறனாளி ஒருவர்
கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு
அடிமேல் அடி வைத்து மெதுவாக
இறங்குவதை கண்டப்பின்...

ஏதோ ஒரு அனிச்சை செயலாய்
நானும் மெதுவாக இறங்கத்
தொடங்கினேன்..!”
    -    K. அற்புதராஜு.

1 comment: