*அவள் நைட்டி அணிந்ததில்லை...*
“ஷேம் ஷேம் பப்பி ஷேம்” என்று
சின்ன
வயதில் ஓடியவள்....
எட்டு
வயதில்
முழங்காலுக்கு
மேலான காயத்தை
அப்பாவுக்கு
காட்ட மறுத்தவள்...
உடை
மாற்றும் அறைக்குள்
அம்மாவைக்
கூட அனுமதியாதவள்...
எக்ஸ்ரே
அறையிலிருந்து ஓடிவந்தவள்...
அருவிகளில்
ஒருபொழுதும் குளிக்காதவள்...
வெளிச்சத்தில்
கணவனுடன் கூட சம்மதியாதவள்...
மரித்தலுக்கு
பின்
அம்மணமாய்க்
கிடக்கிறாள் மார்ச்சுவரியில்..!
ஈக்களும், கண்களும் “அங்கேயே” மொய்க்க
இப்படியாகுமெனில்
அன்புலட்சுமி
தற்கொலையே
செய்திருக்க
மாட்டாள்..!
*சாம்ராஜ்*