எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 20 January 2019

அக்கரை சிவப்பு


கிராமத்திலிருந்து
மாநகரத்துக்குள்
பேருந்தில் பயணிக்கிறேன்...

சிக்னலுக்காக காத்திருக்கையில்
பக்கவாட்டில் பார்க்கிறேன்...
மாநகர பூங்காவில்
பல வண்ணங்களில்
அவ்வளவு அழகானப் பூக்கள்.

கிராமம் தோற்றுவிடும் படி
பச்சை பசேலென புல்வெளி...
அதையே பார்த்து ரசிக்கும்
மாநகரவாசி மீது இனம் புரியா
பொறமை...

கொடுத்து வைத்தவன் என்ற
எண்ணம் மரித்தது...

அவன் புல்லின் மீது
எச்சில் துப்பும் போது..!

                 - கி. அற்புதராஜு.