எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 22 April 2018

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்-2)



அலையும் கடலும்
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை..!

- நகுலன்.



மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம் 
சொல்லக் கூடாத பொழுதொன்றில்
தொடங்கினேன்
எனக்குப் பத்துப் பெண் குழந்தைகள் வேண்டும்
முன்னாள் காதலிகள் பெயர்களை
வைக்கவென
மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.

எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்
அதுவும் ஐந்து என அவள் சொல்கையில்
மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம்

- லதாமகன்.