எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 29 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                     
1. “கூண்டுக்கிளியின்
   காதலில் பிறந்த
   குஞ்சுக்கிளிக்கு
   எப்படி எதற்கு
   வந்தன சிறகுகள்..?”
                          -  கல்யாண்ஜி.

                                        

2. “மிகவும் மோசமான வேலை
   தனக்குத்தானே
   ஒரு கோப்பை
   தேநீர் தயாரித்துக்கொள்வதுதான்..!”
                                                    -  இளம்பிறை.

Monday 28 April 2014

படித்ததில் பிடித்தவை (வளர்மதி கவிதைகள்)

                                                                           
1. “பிடித்தவர்களை
   விளையாட்டிற்காக
   கூட
   அடுத்தவர்களிடம்
   விட்டு கொடுக்க
   விரும்புவதில்லை
   மனது..!
                              -  வளர்மதி.

                                      
2. “பெண்ணுக்கு நல்ல
   எதிர்காலம் உள்ள ஓர் ஆண்
   தேவைப்படுகிறான்..!

   ஆணுக்கு நல்ல கடந்த காலம்
   உள்ள ஓர் பெண்
   தேவைப்படுகிறாள்..!”

                                                        - வளர்மதி.

Sunday 27 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
1. “பிரார்த்தனை
   செய்கிற
   உதடுகளை விட,

   ஓடிப்போய்
   உதவுகிற
   கைகள்
   உயர்வானவை..!”
                                -  கலா.
                                                                 
2. “சரியான
   முடிவு எடுப்பது   
   அனுபவத்தால்
   வருகிறது..!

   அனுபவம்
   தவறான முடிவு
   எடுப்பதால்
   வருகிறது..!”

Saturday 26 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                             
1. “ஹோட்டலில்
   மசாலா தடவிய
   மாமிச உணவுகளைப்
   பார்த்ததும்...

   நாக்கில்
   தண்ணி வந்தா
   அசைவம்..!

   கண்ணில்
   தண்ணி வந்தா
   சைவம்..!”

                  -   சுகி. சிவம்.

                                                                       
2. “கடைசிப் பக்கம்
   கிழிந்து விட்ட
   நாவலுக்கு
   ஒருவர் மட்டுமா
   ஆசிரியர்..?”


              -   செல்வேந்திரன்.

Friday 25 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                               
1. “ஒவ்வொரு
   சண்டைக்குப் பிறகும்
   சமாதானமாகப்
   போயிருக்கலாம்
   என்ற எண்ணத்தை
   தவிர்க்கவே
   முடியவில்லை..!”
           
                        -   சி. ரகுபதி.

                             
2. “கூட்டு வாழ்க்கை...
   படிப்பறிவற்ற
   புறாக்கள்..!”

                            -  கவிமதி.

Thursday 24 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


1. காமராஜரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த   
  கவிதை:
                                         

  “இறக்கும் வரை
   காங்கிரஸில் இருப்பேன் என்றாய்...
   நீ இருக்கும் வரைதான்
   காங்கிரஸே இருந்தது..!”
                                     
2. “எவனோ
   சிலையின்
   முகத்தில்
   கரி பூசி விட்டான்.

   விடிய விடிய
   பெய்த மழைதான்
   தடுத்தது
   பெறும் கலவரத்தை..!”

                                 -   அசன்பசர்.

Wednesday 23 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

                                                                   
“சற்று முன் இறந்தவனின்
சட்டைப் பையில்
செல்போன்
ஒலித்துக்கொண்டே
இருக்கிறது...

கையில் எடுத்த காவலர்
‘சார், யாரோ அம்மு-னு
பேசுறாங்க’ என்கிறார்.

ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து மூடுகின்றன..!”

                          -     வே. பாபு.

Tuesday 22 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                   
1. “நதியில் விழுந்த இலையும்
   காதலில் விழுந்த மனமும் –
   ஒன்றுதான்...

   இரண்டுமே கரை சேரும் வரை
   தத்தளித்துக் கொண்டே இருக்கும்..!”
                                         

2. “கோபத்தில் ஆரம்பமாவது 
   எல்லாம் இறுதியில் 
   வெட்கப்படும்படி முடியும்..!”

Monday 21 April 2014

கீறல்கள்

                                                       
“மோட்டார் சைக்கிள்
விபத்தில்
கை, காலில்
சிராய்ப்புகள்...
இரண்டு வாரத்தில்
புண்கள் ஆறி,
இரண்டு மாதத்தில்
வடுக்கள்
மறைந்தப்பிறகும்...

விபத்தை
அவ்வப்போது
ஞாபகப்படுத்துகிறது...

விபத்தில் வண்டிக்கு
ஏற்பட்ட கீறல்கள்..!”

-  K. அற்புதராஜு.

Sunday 20 April 2014

நட்புக்காலம் – கவிஞர். அறிவுமதி கவிதைகள்

                                                 
1. “அடிவானத்தை மீறிய
   உலகின் அழகு என்பது
   பயங்களற்ற
   இரண்டு மிகச்சிறிய
   இதயங்களின்
   நட்பில்
   இருக்கிறது.”

2. “துளியே 
   கடல்
   என்கிறது
   காமம்.

   கடலும்
   துளி
   என்கிறது
   நட்பு.”

         -   கவிஞர். அறிவுமதி.