எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 27 May 2014

படித்ததில் பிடித்தவை (யூமா. வாசுகி கவிதை)

                                                                                     
“அத்தனை பேர் கூடி
ரயிலுக்குக் காத்திருக்கையில்
என்னிடம் மட்டும் பிரியம் வைத்து
ஒரு காக்கை
தலை தட்டிச் சென்றதும்
கேன்டினில் கொஞ்சம்
தண்ணீர் வாங்கி
சனி கழிய
தலையில் தெளித்துப் போவென
பரிவாகச் சொன்னாள்
பெண்ணொருத்தி..!”
                                                           -   யூமா. வாசுகி.

(கவிதை தொகுப்பு: இரவுகளின் நிழற்படம்)

Monday, 26 May 2014

பாலின ஈர்ப்பு..?

                                                                               






“காலையில் தொடங்கும்
யோகாசன வகுப்பில்
யோகா ஆசிரியரால் கூட
கட்டுபடுத்த முடியாத
ஆண்கள் சிலரது
அலைபாயும் மனதை...

அன்றைய தினம்
எதுவும் செய்யாமல்
கட்டுக்குள் கொண்டு வந்தாள்
கோடை விடுமுறையில்
யோகா கற்றுக்கொள்ள
புதிதாக சேர்ந்த
அழகிய இளம் பெண்..!”

          -  K. அற்புதராஜு.

Sunday, 25 May 2014

படித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதைகள்)

                                                                               
1. “யாரும் கவனிக்காததை
   உணர்ந்த சிறுவன்
   அழுகையை நிறுத்தினான்..!”
                                 -  நா. முத்துக்குமார்.



2. “அடகு வைத்த கடிகாரத்தை
   அடிக்கடி நினைவு படுத்தும்
   மணிக்கட்டில் தழும்பு..!”

                                 -  நா. முத்துக்குமார்.

Saturday, 24 May 2014

எப்போதும் வென்றான்..?


“உறவினர்கள்...நண்பர்கள்...
எல்லோருக்கும்
பிடித்தமானவர்களாக
இருப்பது கடினம்தான்...

அதை விட நம்மை
பிடித்தமானவர்களுக்கு...
எப்போதுமே
பிடித்தமானவர்களாக
இருப்பது மிகவும் கடினம்..!”

  -   K. அற்புதராஜு.

Friday, 23 May 2014

படித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிஞர். அறிவுமதி.)

                                                                                    

“பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்..!
                     

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்..!”
          - கவிஞர். அறிவுமதி.

Thursday, 22 May 2014

கேள்வியின் நாயகி


“இரு சக்கர மோட்டார் வண்டியை
எப்போதுமே அனாயசமாக ஓட்டுபவர்கள்...

‘ஏங்க ஸ்பீடா போறிங்க?
என்ன கீழே பாக்குறீங்க?
ஏன் பள்ளத்துல விட்டிங்க?
எதுக்கு பிரேக் பிடிச்சிங்க?’

என கேள்விகளுடனே பயணிக்கும்
மனைவியுடன் செல்லும் போது மட்டும்
பயத்துடனே ஓட்ட வேண்டியுள்ளது..!”

               -   K. அற்புதராஜு.

Wednesday, 21 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                     
1. “தெளிந்த நீரோடையாக நட்பு
   கலங்கியக் குட்டையாய் காதல்
   தாகத்துடன் நான்..!”
                                                     -   பார்வதி.




                                                                       

2. “கண்ணில் விழுந்த
   தூசி போல்
   உன் காதல்!
   எடுக்கவும் முடியாமல்...
   எடுக்காமல் இருக்கவும்
   முடியாமல்...”

Tuesday, 20 May 2014

படித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள் - 3 )

                                                                           
1. “நீள நீளமாகப் பேசும் பெண்கள்,
   குறுஞ்செய்தி எனில்,
   ஓர் எழுத்துக்குள்
   சுருண்டுகொள்கிறார்கள்..!”
                              (twitter.com/ Sowmi_)

                                                           

2. “5-ம் வாய்ப்பாடு மாதிரி
   இருக்கும் வாழ்க்கை...
      17-ம் வாய்ப்பாடாக மாறிடுது
   கல்யாணத்துக்கு அப்புறம்..!”
                              (twitter.com/ Tparavai)
                                                                 

3. “அது என்ன மாயமோ,
   மந்திரமோ தெரியலை...
   குறட்டை விடுறவருக்குத்தான்
   முதலில் தூக்கம் வந்து
   தொலைக்கிறது..!”
                               (twitter.com/ Kaniyen)

Monday, 19 May 2014

பார்த்ததில் பிடித்தது (எழுத்தாளர் சுஜாதாவிடம் நேர்க்காணல்)


சிகரம் தொட்ட மனிதர்கள் 

எழுத்தாளர் சுஜாதாவிடம்  கோபிநாத் நேர்காணல்

காணொளி காட்சி 



                                                               (நன்றி: விஜய் TV)


1. இந்த காணொளி காட்சி      https://www.youtube.com/watch?v=P0KAhpGPDZ4   
    இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது.

2. இந்த காணொளி காட்சி எந்த வணிக நோக்கத்துடனும்
    வெளியிடப்படவில்லை.

3. இந்த நேர்காணல் சுஜாதா என்கிற சிகரம் தொட்ட மனிதரைப் பற்றிய அறிவு
    பகிர்வுக்காக மட்டுமே வெளியிடப்படுகிறது.

4. இந்த காணொளி காட்சிக்கு தடைக்கூற விரும்பினால் arputharaju.k@gmail.com
    என்ற மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.

Sunday, 18 May 2014

நிஜம் நிழலாகிறது..?

                                                                                   
 “நமக்கு தெரிந்தவர்களை
எதிர் எதிரே சந்திக்கும் போது...

நாம் பார்க்கும் போது
அவர்கள் பார்க்காமல்,
அவர்கள் பார்க்கும் போது
நாம் பார்க்காமல்,
பட்டும் படாமல் 
ஓரப்பார்வை பார்த்து
உறுதி செய்துக்கொள்வோம்
இருவரும்
நான் உன்னை 
பார்க்கவில்லை என...

இருவர்க்குள்ளும்
ஈகோ எட்டிப்பார்க்கும்
யார் முதலில் பேசுவது என...

கடைசி சந்தர்ப்பம் வரை
பேசாமலே கடந்து விடுவதும்
நடந்து விடுகிறது சமயங்களில்...”

     -    K. அற்புதராஜு.

Saturday, 17 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                         
1. “கடற்கரையிலிருந்து
   திரும்பும் போது
   தட்டி விடப்படும்
   மணல் போல்
   எவ்வளவு இயல்பாக
   உதிர்த்து விடுகிறோம்
   நமக்கு பிரியமானவைகளை..!”
                                       -   ஜெனிபர்.

  2. “ஓவ்வொரு
   சிக்னலிலும்
   ஒரு பெண்ணிருப்பாள்;
   கோபத்தை மறக்க..!”
                       -  தெ.சு. கௌதமன்.

Friday, 16 May 2014

நினைத்தும்...நினைக்காமலும்...

                                                                               
“காலையில் வீட்டிலிருந்து
வேலைக்கு கிளம்பி
செல்கையில்... 

தெரு கோவிலில்
முருகனையும்,
ஸ்டேஷன் ரோடு கோவிலில்
ராமரையும், 
அலுவலக வாயில் 
பிள்ளையாரையும் நினைத்து
மனதுக்குள் மானசீகமாக
வணங்கி செல்லும் நான்,

மாலையில்... 
சென்ற வழியிலேதான்
வீடு திரும்புகிறேன்
எந்த கடவுளையும்
நினைக்காமலே..!”

-    K. அற்புதராஜு.

Thursday, 15 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                           
1. “எங்கள் நாட்டு
  ஏழைப் பெண்களுக்கு
  அவர்கள் கருவுரும்
  காலத்தில் மட்டும்தான்
  வயிறு நிரம்புகிறது..!”
                         
2. “எதிர் எதிர் வீட்டுக்
   குழந்தைகளின்
   நட்பை, 
   உள்ளிழுத்துக்
   கதவு சாத்துகிறது
   அம்மாக்களின்
   ஊடல்..!”
                      -  ச. முத்துவேல்.