எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 2 January 2014

செல்போனும்... காதும்... காதலும்?

                                                                   
அப்படி வீட்டில்
என்ன கெடுபிடி...
தந்தை திட்டுவாரா?
தாய் கண்டிப்பாரா?
அண்ணன் அடிப்பாரா?
அக்கா அதட்டுவாளா?

கல்லூரியில் படிக்கும்,
வேலைக்குப்போகும்
இளம் பெண்கள்
அனைவருமே...
வீட்டை விட்டு
தெருவில் இறங்கியதும்
செல்போனும் காதும்
ஒட்டிக்கொள்கின்றனவே...

ஜாக்கிரதை
பெண்களே...
உயிரும் உடலும்
ஒட்டிக்கொண்டிருக்க வேண்டாமா..?

-   K. அற்புதராஜு

No comments:

Post a Comment