எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 13 January 2014

படித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)

                                         

கேள்வி:           ஒரு நாடு குறித்த முதல் அபிப்ராயம் யாரால் ஏற்படுகிறது?

பதில்:               "ஆட்டோ அல்லது டாக்ஸி டிரைவர்களால்!

                          பிரபல எழுத்தாளரான ஷிவ் கேரே, சிங்கப்பூர்
                          சென்றிருந்தப்போது ஒரு டாக்ஸியில் ஏறி அதன் ஓட்டுனரிடம்
                          ஒரு விசிட்டிங் கார்டைகொடுத்து அதிலுள்ள முகவரியில்
                          கொண்டு சேர்க்கும்ப்படி கேட்டார். குறிப்பிட்ட இடத்துக்குச்
                          சென்று இறங்கிய உடன், ஷிவ் கேரே மீட்டரில் காட்டிய 11
                          டாலர்களைத் தர, டாக்ஸி டிரைவரோ 10 டாலர்களை மற்றும்
                          பெற்றுக்கொண்டு 1 டாலரைத் திருப்பித் தந்தார். காரணம்
                          கேட்டதற்கு, 'போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதர்க்காகச்
                          சற்றே சுற்று வழியில் வந்தேன். நேர் வழியில் வந்திருந்தால், 10
                          டாலர்கள்தான் ஆகியிருக்கும்' என்றார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.
                          அதன் பிறகு சிங்கப்பூரில் என்ன மோசமான அனுபவம்
                          ஏற்பட்டிருந்தாலும், அது ஷிவ் கேரே மனதைப் பாதித்திருக்குமா
                          என்ன!?"

                                                            -  அ.க. இராஜாராமன், திருவண்ணாமலை.
                         (நன்றி: ஆனந்த விகடன் - நானே கேள்வி... நானே பதில்! - 15.01.14.)


[Shiv Khera is an Indian author of self-help books and activist. While working in the United States, he was inspired by a lecture delivered by Norman Vincent Peale and followed his motivational teachings. He has written several books including You Can Win. He launched a movement against caste-based reservation in India, and has founded an organization called Country First Foundation whose mission is "to ensure freedom through education and justice."] Web Site: www.shivkhera.com

No comments:

Post a Comment