எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 1 December 2013

மணல் வீடு

                                                                                     
 "காலையில்
 வீட்டு வேலைக்காக
 மணல் குவியலிலிருந்து
 மண் அள்ளும் போது,

 நேற்றிரவு
 குழந்தைகள் கட்டிய
 மணல் வீடுகளை
 சிதைக்க
 மனது உறுத்துகிறது..!"

                   -   K. அற்புதராஜு

1 comment:

  1. மென்னுணர்வு உங்கள் கவிதைகளில் அற்புதமாக வெளிப்படுகின்றது.

    அன்புடன் பரந்தாமன்.

    ReplyDelete