எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 23 December 2013

சிக்னல்

                                                                                           
“மின்சார ரயில் பயணத்துக்காக
பிளாட்பார பெஞ்சில்
காத்திருக்கும் குடும்பத்தில்
தாய், தந்தை, இரு மகள்கள்.

சிறியவள் ஓடிவந்து
சிக்னலைப்பார்த்து
ஹை... பச்சை லைட்
எரியுது’ என்றாள்.

அதை கவனித்த அவளது அக்கா
சிக்னலைப்பார்த்து
ஏய்! இது பச்சை இல்லை
நீலம்’ என்றாள்.

சிறியவள், ‘அம்மா... இங்க
பாரும்மா, இவ பச்சை லைட்டை
நீலம் என்கிறாள்’ என்றாள்.

சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த
தாய், தந்தை...
இந்த ‘நிறக்குருடு’
பிரச்சனையை
கவனிக்கவேயில்லை!”

               -- K. அற்புதராஜு

No comments:

Post a Comment