எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 29 November 2013

*பின் தொடர்தல்...*


சிக்னலுக்காக காக்கத் தொடங்கிய

மின்சார ரயிலில் ஜன்னலோர

இருக்கையில் நான்.

 

ஒடிக்கொண்டிருந்த காட்சிகள் மாறி

புல்வெளியில் நிலைத்தன கண்கள்.

 

நிறைய வண்ணத்துப்பூச்சிகள்.

அன்றைய தினம் எல்லாமே

வெள்ளை நிறத்தில் இருந்தன.

ஒன்றிரண்டு வேறு வண்ணங்களில்.

 

அவற்றில் ஒன்று...

 

மேலே...

.

.

.           

கீழே...

           பக்கவாட்டில்...     

பறந்தும்...

 

மற்றொன்று

அதை விடாமல்

பின் தொடர்ந்தது...

 

இரண்டுக்கும்

மோதலா..?     காதலா..?     காமமா..?

 

எப்படியோ...

ஒன்றை மற்றொன்று

பின் தொடர்வது இயல்புதானே!

 

சலிக்காமல் ஒன்றை மற்றொன்று

பின் தொடர்ந்ததை

ரசிக்க முடித்தது

ரயில் கிளம்பும் வரை..!

 

 *கி.அற்புதராஜு*

3 comments: