எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 17 November 2013

*மஞ்சள் பை*



கிராமங்களில் 
உறவினர்களிடையே 
பண்ட பரிமாற்றம் 
தினமும் நடைப்பெறும்
எல்லாமே மஞ்சள் பையில்தான்..!

 

தேங்காய்மாங்காய்
வத்தல்வடாம்
காய்கள்... 
என சகலமும்

 

வீட்டில் உள்ள சின்ன 
பிள்ளைகள்தான் 
எடுத்து செல்வார்கள்

மறக்காமல் பையை 
வாங்கி வந்து விடு 
என சொல்லித்தான் 
அனுப்புவார்கள்

சமயங்களில் 
அதே பையில் 
வேறு பண்டங்கள் 
அவர்கள் வீட்டிலிருந்து 
வந்து சேரும். 

பொருளின் மதிப்பு 
அதிகம்தான் என்றாலும் 
பை திரும்பவில்லையெனில் 
மன வருத்தம்தான்..!

 

*கி.அற்புதராஜு*


28 comments:

  1. It's high time we get back to that habit!

    ReplyDelete
  2. ஸ்ரீராம்11 February 2021 at 09:29

    அந்த கால
    குடும்பங்களின்
    மிக முக்கியமான
    உறுப்பினர்
    மஞ்சள் பை.
    அது எளிமையின்
    அடையாளம்.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்11 February 2021 at 09:33

    அருமை.

    ReplyDelete
  5. புன்னகை.

    ReplyDelete
  6. அருமை.
    கடைசி பத்தியில்
    "பொருள்களின் விலை
    அதிகமென்றாலும்" அது
    'பொருள்களின் விலை
    அதிகமில்லையென்றாலும்"
    என்று வரவேண்டுமா?
    உங்கள் பார்வைக்கு.

    ReplyDelete
  7. EditRamesh said...
    திரும்பவும்
    படித்த போது
    விளங்கியது.
    "பொரூள்களின் விலை
    அதிகமென்றாலும்தான்"
    சரி.

    மிக அருமையான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      90-களில் எழுதிய
      கவிதை "மஞ்சள் பை".

      தங்களின்
      மதிப்பீட்டுக்கு
      மிகவும் நன்றி.
      🙏

      Delete
    2. 1970 - 80 - களில்
      கிராமத்து வீட்டில்
      உபயோகப்படுத்திய
      நாகை - மு.ரா.சன்ஸ்
      ஜவுளி கடையின்
      "மஞ்சள் பை" - தான்
      இந்த கவிதையின்
      கதாநாயகி.

      அது மிகவும்
      அழகிய நாட்கள்.

      Delete
  8. பைகள் கூட பெரும்பாலும் திரும்பிவிடும். பணமும் புத்தகமும் திரும்புவது கடினம்.

    ReplyDelete
  9. அருமை.

    ReplyDelete
  10. மஞ்ச பை 2020 ல் மீண்டும் வருகிறது. கல்யாண தாம்பூலம் வழியாக. தயாராகுங்கள் பண்ட மாற்று முறைக்கு.

    ReplyDelete
  11. Emotional tears in Eyes.

    ReplyDelete
  12. கவிதா ராணி13 February 2021 at 14:22

    மஞ்சள் பைக்குள்
    ஒரு அழகான
    கிராமத்து
    உறவினர்கள்
    கதையைச்
    சொல்கிறது
    இந்தக் கவிதை.

    அருமை.

    ReplyDelete
  13. பிருந்தா13 February 2021 at 14:41

    மஞ்சள் பை
    கவிதை Superb.

    ஒரு காலத்தில்
    இந்த மஞ்சள் பையை
    தவிர்த்து
    பாலித்தின் பையை
    எடுத்துச் செல்லவே
    நான்
    விருப்பப்பட்டிருக்கிறேன்
    என்பதை நினைக்கும் போது
    வருத்தமாக இருக்கிறது.

    So much feelings..!

    ReplyDelete
  14. தங்கள் மஞ்சள் பை
    கவிதை அருமை.

    பை திரும்பாவிடில்
    மன வருத்தம்தான்.

    மக்களின் மனநிலையை
    அழகாகக் கூறியுள்ளீர்கள்.

    மஞ்சள் பை
    பற்றி எனது பார்வை.

    மஞ்சள் பை
    மாறுவதில்லை
    எக்காலத்தும்
    உள்ளிருக்கும்
    பொருட்கள்
    எவ்வகையாயினும்.

    மனிதன்?

    ReplyDelete
  15. அருமை இன்றும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் வணிகர்கள் கடை சாவி பனம் ஆகியவற்றினை மஞ்சள் பையில் எடுத்து செல்வது வழக்கம்.

    ReplyDelete
  16. வெங்கட்ராமன், ஆம்பூர்23 December 2021 at 09:02

    அருமை.

    ReplyDelete
  17. ஸ்ரீதர்23 December 2021 at 09:03

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  18. அறிவழகன்23 December 2021 at 09:05

    நீண்ட
    இடைவெளிக்குப் பிறகு
    மஞ்சப்பையின் மகத்துவம்
    அருமை.

    ReplyDelete
  19. வெங்கடபதி23 December 2021 at 10:39

    True.

    ReplyDelete
  20. நரசிம்மன் R.K23 December 2021 at 12:37

    Super.

    ReplyDelete
  21. ஸ்ரீதரன்23 December 2021 at 17:35

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. Express a feeling of gratitude.

    ReplyDelete
  23. பள்ளிக்கூடம் செல்லும் போது புத்தகங்களை தாங்கி நம்முடன் பயனித்த தோழன்
    அ.இராமச்சந்திரன் பொறியாளர்
    இந்திய வானவியல் ஆய்வு நிலையம் காவலூர் திருப்பத்தூர் மாவட்டம் 9159350501

    ReplyDelete