எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 28 February 2025

படித்ததில் பிடித்தவை (“ராஜா ராணி ஜாக்கி” – கல்யாண்ஜி கவிதை)



*ராஜா ராணி ஜாக்கி*


"சீட்டுக்கட்டின் வழவழப்பில்

ஒரு மாயமிருந்தது.

ஐம்பத்திரண்டு என்கிற

அதன் எண்ணிக்கையிலும்

ஏதோ ஒன்று.


தலைகீழாகவும் நேராகவும்

நிற்கிற ராஜா ராணிகளின்

இதுவரை பாராத சாயல்கள்

அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்

ரகசியமாக அழைத்தன.


கெட்டபுத்தகங்களை

வாசிக்கத் தரும்

பதின்வயது சினேகிதன் போல

ஜாக்கி இருந்தான்.


யாரிடமும் புகையிலை

வாங்கிப்போட்டு

எப்போதும் கதை சொல்லும்

கிழவி போல பிரியமானது

ஜோக்கர்.


ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்

அவரவர் சௌகரியப்படி அமர்ந்து

அவரவர்க்குத் தோன்றுவதைப்

பேசுவது பிடித்திருந்தது நிரம்ப.


ஜெயித்தவர்களை விட,

தோற்றவர்கள்

விளையாட்டைத் தொடரும்படி  

இருந்த ஒரு வினோத அழைப்பு

சிக்கல் நூல்கண்டு போல்

சவாலுடன்

அவிழ்க்கத் தூண்டியது.


பக்கத்திலிருந்த என்னிடம்

கஜேந்திர மாமா

‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே' என்று சிறு நீர் கழிக்கப்

போன சமயம்

சும்மாதான் கையில் எடுத்தேன்.

சூதாடியாவதற்குப் போதுமானதாக

இருந்தது அந்தச் சும்மா என்கிற 

சின்னஞ் சிறு நொடி..!"


*கல்யாண்ஜி*




23 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. ஶ்ரீராம்28 February 2025 at 13:01

    👌

    ReplyDelete
  3. செல்லதுரை28 February 2025 at 13:02

    😱

    ReplyDelete
  4. Nice representation, sir.

    ReplyDelete
  5. Seems good.
    💐

    ReplyDelete
  6. சிறப்பு சார் ...🌻

    ReplyDelete
  7. மிக அருமை சார் வணக்கம்

    ReplyDelete
  8. சதீஷ், விழுப்புரம்.28 February 2025 at 18:36

    🙏

    ReplyDelete
  9. சீனிவாசன்28 February 2025 at 18:37

    🙏

    ReplyDelete
  10. தமிழ்செல்வன் R.K28 February 2025 at 18:38

    👌

    ReplyDelete
  11. நவநீதமூர்த்தி28 February 2025 at 18:52

    👏🏻👏🏻👏🏻

    ReplyDelete
  12. வெங்கட், வைஷ்ணவி நகர்.28 February 2025 at 18:54

    👍

    ReplyDelete
  13. செல்வராஜ்28 February 2025 at 20:37

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

    ReplyDelete
  14. வெங்கட்ராமன், ஆம்பூர்.28 February 2025 at 21:27

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  15. அருள்ராஜ்28 February 2025 at 21:29

    👍

    ReplyDelete
  16. செல்வம் K.P28 February 2025 at 21:30

    👌

    ReplyDelete
  17. சங்கரன்1 March 2025 at 04:53

    😯

    ReplyDelete
  18. அருமை

    ReplyDelete
  19. ப ச சிவகுமார்2 March 2025 at 07:22

    அருமை 👌👌👌🙏🙏🙏

    ReplyDelete