எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 5 April 2025

படித்ததில் பிடித்தவை (“மியாவ்” – கல்யாண்ஜி கவிதை)

 

*மியாவ்*


“மூன்றுமே 

வெவ்வேறு நிறம்.

அதனதன் நான்கு நாள் 

உலகை 

தனித் தனி 

மியாவ் கொண்டு

புகார்களை எழுதின...


ஒன்று படியேறி 

உள்ளே வந்து

அடுக்களைத் தரையை 

முகர்ந்து பார்த்தது.


இன்னொரு பழுப்பு, 

குழாயடிப் பக்கம் 

தண்ணீர்த் தகடை 

நக்கிப்  பார்த்தது.


மூன்றாம் சாம்பல், 

ஆசுவாசமாய்த் 

தரையில் அமர்ந்து 

தன்னைச் சுத்தம் செய்தது.


நான்கே நாட்களில் 

வாழ்வைப் புரிந்த 

மூன்றாவதை 

எனக்குப் பிடித்திருந்தது..!”

 

*கல்யாண்ஜி*

(2016)




25 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. True one, sir.

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா,
    அது ஒரு அழகான மற்றும் சிந்திக்கத் தூண்டும் கதை. அது உண்மையிலேயே வாழ்க்கையில் நமது சொந்த நிலையை ஆழமாகச் சிந்திக்க வைத்தது, மேலும் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நினைவூட்டியது. இவ்வளவு அர்த்தமுள்ள செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. 💐🙏

    ReplyDelete
  4. ஸ்ரீராம்5 April 2025 at 10:50

    👌

    ReplyDelete
  5. செல்லதுரை5 April 2025 at 11:20

    ❤️

    ReplyDelete
  6. ஸ்ரீதரன்5 April 2025 at 11:20

    ❤️

    ReplyDelete
  7. கவிதை மிக அருமை

    ReplyDelete
  8. செல்வராஜ்5 April 2025 at 18:42

    🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  9. வெங்கட்ராமன், ஆம்பூர்.5 April 2025 at 18:43

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  10. Some what understanding,

    ReplyDelete
  11. சதீஷ், விழுப்புரம்.5 April 2025 at 18:45

    🙏

    ReplyDelete
  12. சீனிவாசன்5 April 2025 at 18:45

    🙏🙏🙏

    ReplyDelete
  13. அருள்ராஜ்5 April 2025 at 18:47

    👏

    ReplyDelete
  14. பிரபாகரன்5 April 2025 at 18:48

    👌

    ReplyDelete
  15. வெங்கடேஷ்5 April 2025 at 18:50

    👌

    ReplyDelete
  16. குமுதா5 April 2025 at 18:50

    👌

    ReplyDelete
  17. சுகிர்தா5 April 2025 at 19:23

    🩷

    ReplyDelete
  18. G.K. காஞ்சனா6 April 2025 at 06:45

    🐤

    ReplyDelete
  19. நாராயணகுமார்6 April 2025 at 06:51

    Super sir.
    Self care.

    ReplyDelete
  20. R.K. தமிழ்செல்வன்6 April 2025 at 12:13

    👌

    ReplyDelete