*பள்ளத்து வீடுகள்*
“எனக்கெட்டு வயசிருக்கும்
எங்களை விட்டு அப்பா
ஓடிப்போன பொழுது.
பத்து வயதில் படிப்பை
நிறுத்திவிட்டுப்
பள்ளத்து வீடுகளுக்குப்
பலகாரம் விற்றுவர
அம்மா அனுப்பினாள்.
ஊரை விட்டொதுங்கிய
சரவணா டாக்கீஸின்
பின்புறத்துக் குடிசைகளைத்தான்
பள்ளத்து வீடுகளென்போம்.
அந்த வீடுகளில்
எப்போதும் பெண்களின்
ராஜ்ஜியந்தான்.
பகல் முழுக்க
பூவரச மர நிழலில்
வெற்றிலைச் சாறு தெறிக்க
வம்பு பேசிச் சிரித்திருப்பார்கள்.
ஆண்கள் அவ்வப்போது
அவசர அவசரமாக
வந்து போவார்கள்...
பல வருசங்கழிந்து
பம்பாய்க்குப் பக்கத்திலிருந்து
அப்பாவின் கடிதம் -
உடனே ஊருக்கு வருவதாக.
அப்பா வந்ததும்
அதட்டிக் கேட்கணும் -
பள்ளிக்குப் போகாமல்
பரத்தையர் வீடுகளில்
நான் பலகாரம் விற்றதற்கு
நீ தானே காரணமென்று.
கூடவே -
பல நாள் பட்டினி கிடந்தும்
பிள்ளைகள் வளர்க்க வென்று
பள்ளத்தில் குடியேறாத
அம்மாவின் பெருமை சொல்லி
ஆங்காரமாய்ச் சிரிக்கவும்
வேணும்..!”
*காளிங்கராயன்*
(கணையாழி ஏப்ரல் - 1994)
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*காளிங்கராயன்*
ஆரம்ப காலங்களில்
வத்சலகுமாரன்
எனும் புனைப் பெயரிலும்
தற்பொழுது காளிங்கராயன்
எனும் புனைப் பெயரிலும்
எழுதிக் கொண்டிருக்கும்
திரு. சுரேஷ் அவர்கள்
தமிழ்நாடு மின்சார
வாரியத்தில் உதவி செயற்
பொறியாளராக பணிப்
புரிகிறார்.
தொண்ணூறுகளில் தொடங்கி
தமிழின் சிற்றிதழ்களில்
கவிதைகள், விமர்சனங்கள்,
மொழி பெயர்ப்புகள் என
இயங்கி வருகிறார்.
mathangi67.blogspot.com என்ற
வலைப்பூவில் அச்சில்
வந்தவைகளைப்
பதிந்து வைத்திருக்கிறார்.
இக்கவிதை (பள்ளத்து வீடுகள்)
கணையாழி இதழில்
எழுத்தாளர் சுஜாதா
அவர்களால் தேர்வு
செய்யப்பட்டு ஏப்ரல்
1994-ல் பிரசுரிக்கப்பட்டது.
தற்பொழுது பால்புதுமையினர்
கவிதைகள் மற்றும்
நேர்காணல்களைத்
தொடர்ந்து மொழி பெயர்த்து
வருகிறார்...
சதங்கை
உன்னதம்
கனவு
புதுவிசை
புது எழுத்து
யாதுமாகி
சுந்தர சுகன்
மவ்னம்
வேட்கை
கவிதாசரண்
அம்மா (பிரான்ஸ்)
எக்சில் (பிரான்ஸ்)
தீராநதி (குமுதம்)
இந்து தமிழ்திசை
மணல்வீடு
வெள்ளைக் குதிரை
அணங்கு...
போன்ற சிறுபத்திரிகைகளில்
இவரது படைப்புகள்
வெளிவந்து
கொண்டிருக்கிறது.
இறுதியாக அவற்றைத்
தொகுத்து வெளியிடும்
திட்டமும் உள்ளது.
அருமை.
ReplyDelete👌
அருமை வாழ்த்துக்கள்
ReplyDelete👍👍
ReplyDelete👌
ReplyDelete🙏
ReplyDelete👍👍💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteContinue your
ReplyDeletegood postings
sir. 👍
🩷
ReplyDelete👌
ReplyDelete👍
ReplyDelete🙏
ReplyDelete👌👌👌
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ReplyDeleteமனதை தொட்ட கவிதை.
ReplyDelete💐
👏
ReplyDelete😔👌
ReplyDelete👌
ReplyDeleteOur AEE..Sir..?
ReplyDeleteYes Sir...
DeleteEr. Suresh, AEE/E/Commissioning.
Hoo...
DeleteInteresting sir..
👍
ReplyDeleteஅருமை 👍
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete👍
ReplyDeleteSuper.
ReplyDelete👏
தங்கள் பகிர்விற்கு அன்பும் நன்றியும் சார்...💙💙 தம் கருத்துகளைப் பதிவிட்ட தோழமைகள் அனைவர்க்கும் மிகுந்த நன்றிகள் .🙏.
ReplyDeleteகவிதாசிரியர்
Deleteஅவர்களுக்கு...
தங்களின் கவிதையை
இத்தளத்திற்காக
பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி.
🙏
சிறந்த கவிதைகள்
எப்போதுமே
அதன் உச்சத்தை
கண்டடைந்து விடும்..!
🩷
Deleteவாழ்த்துக்கள் தோழர்.
ReplyDeleteநன்றி தோழர்
DeleteOh suresh sir?
ReplyDeleteNice sir,
We don't know sir.
Great writer, poet.
👌
நன்றி மேடம்
Delete👌🙏💐
ReplyDeleteமிக்க நன்றி ராம்
ReplyDeleteHeart touching one.
ReplyDelete