எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 9 December 2024

படித்ததில் பிடித்தவை (“நான் அழவில்லை” – கல்யாண்ஜி கவிதை)


 நான் அழவில்லை

“ஒரே திருமண அழைப்பிதழை

நூறு முகவரிகளுக்குச் 

தட்டச்சுகிறாள்

கூரியர் அலுவலகத்துப் பெண்.


வேகமாகக் காலியாகிறது 

அவளுடைய 

நீல நிற தண்ணீர் பாட்டில்.

ஒவ்வொரு மிடறு 

அருந்தும் போதும்

’நான் அழவில்லை’ என்று

குப்பியின் திருகு வரைகளிடம் 

அவள் சொல்ல முயல்கிறாள்.


தானாகவே உடையப் போகும் 

ஒரு குமிழி இப்போது 

தண்ணீர் பாட்டிலுக்குள்..!”

 

*கல்யாண்ஜி*



19 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. அருமை

    ReplyDelete
  3. ஆறுமுகம்10 December 2024 at 20:27

    அருமை Sir.
    💐

    ReplyDelete
  4. Nice touch, sir.

    ReplyDelete
  5. வெங்கடபதி10 December 2024 at 20:32

    👌

    ReplyDelete
  6. திருவடி10 December 2024 at 20:33

    👌

    ReplyDelete
  7. சத்தியமூர்த்தி10 December 2024 at 20:34

    👍

    ReplyDelete
  8. செல்லதுரை10 December 2024 at 21:19

    👌👌👌

    ReplyDelete
  9. வெங்கட், வைஷ்ணவி நகர்.10 December 2024 at 21:21

    👍

    ReplyDelete
  10. நவநீதமூர்த்தி10 December 2024 at 22:07

    👏👏👏

    ReplyDelete
  11. செல்வம்10 December 2024 at 22:08

    👍

    ReplyDelete
  12. ராஜா ராமன்10 December 2024 at 22:30

    🙏

    ReplyDelete
  13. ஆடலரசு11 December 2024 at 06:13

    மதுரை மீனாட்சிக்கும்
    காஞ்சி காமாட்சிக்கும்
    மாசம் ஒரு கல்யாணமாம்
    தேர் மேல மாப்பிள்ளை
    ஊர்வலமாம்
    நம்ம எதிர்த்த வீட்டு
    பொண்ணு வயசாகி
    நாள் ஆச்சு
    எப்ப தான் கல்யாணமாம்
    அவ கண்ணில் எப்பவும்
    நீர்க்கோலமம் !
    1980-90களில் கம்யூனிஸ்ட்
    மேடைகளில் ஒலித்த பாடல்
    ஏனோ இதை படிக்கும் பொழுது
    ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  14. வெங்கடேஷ் பண்டரிநாதன்11 December 2024 at 06:20

    👍

    ReplyDelete
  15. அம்மையப்பன்11 December 2024 at 06:26

    👍

    ReplyDelete
  16. சதீஷ், விழுப்புரம்.11 December 2024 at 08:22

    🙏

    ReplyDelete