எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 17 November 2024

படித்ததில் பிடித்தவை (“நவ்வாப் பழம்” – கல்யாண்ஜி கவிதை)

 

*நவ்வாப் பழம்*

 

பேருந்துக்குக் காத்திருக்கையில்

எனக்கு பக்கத்து நபரிடம் பேசும்

கெட்ட பழக்கம்.

வெளுத்த சட்டை பூராவும்

ஒரே கறையா இருக்கே..?’

என் கேள்விக்குக் கீழே குனிந்து பார்த்தவர்

கருநீலக் கறைகளைத் தொட்டுச் சிரித்தார்.

காத்துக் காலம் லா…

நவ்வாப் பழம் உதுந்தது அது

சட்டையை மறுபடி நீவிக்கொண்டார்.

நாவல் பழம் உதிர்கிற

காற்றுக் காலத்திற்கு

எந்தப் பேருந்தில் ஏறினால்

உடனே போகலாம்..?

 

*கல்யாண்ஜி*



28 comments:

  1. arputharaju.blogspot.com17 November 2024 at 06:34

    #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Nice narration sir.
    👌

    ReplyDelete
  4. Sathish, Villupuram.17 November 2024 at 08:32

    🙏

    ReplyDelete
  5. பிருந்தா17 November 2024 at 09:53

    சட்டையில்
    நாவல் பழம்
    கறையை
    நீவி கொடுப்பதிலேயே
    இயற்கையை
    ஆர தழுவிக் கொள்கிறார்
    கவிதையின் நாயகன்.

    முதலில் கறையாக பார்த்து
    பின் கவிதையாக பார்க்கிறார்
    கவிதை ஆசிரியர்.

    அருமை.

    ReplyDelete
  6. ஆறுமுகம்17 November 2024 at 09:54

    👌👍

    ReplyDelete
  7. பாஸ்கர் B17 November 2024 at 09:57

    👍

    ReplyDelete
  8. தெய்வசிகாமணி17 November 2024 at 09:59

    👍

    ReplyDelete
  9. இந்த அனுபவம் எனக்கு உண்டு.
    அருமை

    ReplyDelete
  10. தனசேகர்17 November 2024 at 10:27

    👍

    ReplyDelete
  11. பிரபாகரன்17 November 2024 at 10:57

    🙏

    ReplyDelete
  12. அருமை

    ReplyDelete
  13. நவநீதமூர்த்தி17 November 2024 at 12:31

    👏👏👏

    ReplyDelete
  14. வெங்கட்ராமன், ஆம்பூர்.17 November 2024 at 12:33

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  15. சிறப்பு சார்🪻🪻🪻

    ReplyDelete
  16. திருவடி18 November 2024 at 08:57

    👌

    ReplyDelete
  17. சுகிர்தா18 November 2024 at 21:53

    👍

    ReplyDelete
  18. லதா இளங்கோ21 November 2024 at 18:46

    👏

    ReplyDelete
  19. அருள்ராஜ்23 November 2024 at 16:16

    👏

    ReplyDelete