*நவ்வாப் பழம்*
“பேருந்துக்குக்
காத்திருக்கையில்
எனக்கு பக்கத்து நபரிடம் பேசும்
கெட்ட
பழக்கம்.
‘வெளுத்த சட்டை பூராவும்
ஒரே
கறையா இருக்கே..?’
என்
கேள்விக்குக் கீழே குனிந்து பார்த்தவர்
கருநீலக்
கறைகளைத் தொட்டுச் சிரித்தார்.
‘காத்துக் காலம் லா…
நவ்வாப்
பழம் உதுந்தது அது’
சட்டையை
மறுபடி நீவிக்கொண்டார்.
நாவல்
பழம் உதிர்கிற
காற்றுக்
காலத்திற்கு
எந்தப்
பேருந்தில் ஏறினால்
உடனே
போகலாம்..?”
*கல்யாண்ஜி*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDeleteவண்ணதாசன்
(பிறப்பு: 1946)
என்ற புனைப்பெயரில்
சிறுகதைகளும்,
கல்யாண்ஜி என்ற
புனைப்பெயரில்
கவிதைகளும்
எழுதுபவரின்
இயற்பெயர்,
சி.கல்யாணசுந்தரம்.
இவர் தமிழ்நாடு,
திருநெல்வேலியில்
பிறந்தவர்.
இவரது தந்தை
இலக்கியவாதி
தி. க. சிவசங்கரன் ஆவார்.
இவர் தந்தையும்
சாகித்ய அகாதமி விருது
பெற்றவர்.
நவீன தமிழ்ச் சிறுகதை
உலகில் மிகுந்த கவனம்
பெற்ற எழுத்தாளரான
வண்ணதாசன்,
தீபம் இதழில் எழுதத்
துவங்கியவர்.
1962 ஆம் ஆண்டில் இருந்து
இன்று வரை தொடர்ந்து
சிறுகதைகள் எழுதி வருகிறார்.
இவரது 'ஒரு சிறு இசை'
என்ற சிறுகதை நூலுக்காக
இந்திய அரசின் 2016 ஆம்
ஆண்டுக்கான
சாகித்திய அகாதமி விருது
கிடைத்தது.
இவரது சிறுகதைகள்
பல்கலைக்கழகங்களில்
பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
"இலக்கியச் சிந்தனை"
உள்ளிட்ட பல முக்கிய
விருதுகளைப் பெற்றிருக்கிறார்
வண்ணதாசன்.
2016 "விஷ்ணுபுரம் விருது"
இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
இலக்கியத் தோட்டம் எனும்
அமைப்பு தமிழ்
இலக்கியத்திற்கான வாழ்நாள்
சாதனையாளர் விருதினை
இவருக்கு வழங்கியது.
👌👌👌
ReplyDelete👍
ReplyDelete🙏
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDelete👍👍
ReplyDelete🙏💐🙏
ReplyDeleteNice narration sir.
ReplyDelete👌
🙏
ReplyDeleteசட்டையில்
ReplyDeleteநாவல் பழம்
கறையை
நீவி கொடுப்பதிலேயே
இயற்கையை
ஆர தழுவிக் கொள்கிறார்
கவிதையின் நாயகன்.
முதலில் கறையாக பார்த்து
பின் கவிதையாக பார்க்கிறார்
கவிதை ஆசிரியர்.
அருமை.
👌👍
ReplyDelete👍
ReplyDelete👍
ReplyDeleteஇந்த அனுபவம் எனக்கு உண்டு.
ReplyDeleteஅருமை
👍
ReplyDelete💐
ReplyDelete🙏
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete👏👏👏
ReplyDeleteNice sir.
ReplyDelete👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteசிறப்பு சார்🪻🪻🪻
ReplyDelete👌
ReplyDelete👌
ReplyDelete👍
ReplyDelete👏
ReplyDelete👏
ReplyDelete