எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 26 June 2015

படித்ததில் பிடித்தவை (கவிஞர் மகுடேசுவரன் கவிதை)


நானும் அழுதேன்...
“பார்வையற்றவர்
நின்றுகொண்டிருந்தார்.

அவர் கண்களிலிருந்து
கண்ணீர் வடிந்தது.

சட்டைக் கீழ்முனையால்
கண்களைத் துடைத்தார்.

பார்வையிழந்தக் கண்களின்
நாமறியாப் பயனாக
உணர்ச்சிகளின் தூராத ஊற்றுகள்
வற்றாது சுரந்துக் கொண்டிருப்பதை கண்டேன்.

இறைமையின் நீர் வழிப் பாதைகளில்
அதுவுமொன்று என்று தோன்றிற்று.

ஏனோ
நானும் அழுதேன்."

                                      -   கவிஞர் மகுடேசுவரன்.

No comments:

Post a Comment