எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
- படித்ததில் பிடித்தவை (1138)
- எனது கவிதை (223)
- பார்த்ததில் பிடித்தது (20)
- ஓவியங்கள் (8)
- புத்தகம் (5)
- எனது கட்டுரை (2)
- திரைப்படம் (2)
Monday, 29 June 2015
Friday, 26 June 2015
படித்ததில் பிடித்தவை (கவிஞர் மகுடேசுவரன் கவிதை)
நானும் அழுதேன்...
“பார்வையற்றவர்
நின்றுகொண்டிருந்தார்.
அவர் கண்களிலிருந்து
கண்ணீர் வடிந்தது.
சட்டைக் கீழ்முனையால்
கண்களைத் துடைத்தார்.
பார்வையிழந்தக் கண்களின்
நாமறியாப் பயனாக
உணர்ச்சிகளின் தூராத ஊற்றுகள்
வற்றாது சுரந்துக் கொண்டிருப்பதை கண்டேன்.
இறைமையின் நீர் வழிப் பாதைகளில்
அதுவுமொன்று என்று தோன்றிற்று.
ஏனோ
நானும் அழுதேன்."
- கவிஞர் மகுடேசுவரன்.
Sunday, 21 June 2015
Friday, 19 June 2015
Sunday, 14 June 2015
Wednesday, 10 June 2015
*ஒரு இலையின் இறுதிப்பயணம்...*
“மரத்தில் தாவி தாவி
செல்லும் அணில்...
அணில் கால் பட்டு
கிளையிலிருந்து
விடுபட்டது பழுத்த இலை...
பழுத்த இலை மெல்ல
காற்றில் மிதந்து மிதந்து
தனது இறுதி பயணத்தின்
முடிவில் தொட்டது மண்ணை...
மண்ணில் விழும் இலையை
பாவ உணர்ச்சியோடு
நானும்...
குற்ற உணர்ச்சியோடு
அணிலும்...
பார்த்துக்கொண்டிருந்தோம்..!”
Thursday, 4 June 2015
Subscribe to:
Posts (Atom)