எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 5 March 2014

ஒலிச்சித்திரம்

                                                                                   
“தினம்தோறும் காலையில்...
தாத்தா போடும்
தண்ணீர் மோட்டார் சத்தமும்
அம்மா சமையலில்
குக்கர் சத்தமும்
அப்பாவின் யோகாசன
ஓம் ரீங்காரமும்
மகனுக்கு பிடித்த
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும்
இணைந்து கலந்த
ஒலிச்சித்திரமாகவே
ஒலிக்கின்றன வீடுகளில்..!”
     -     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment