எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 28 March 2014

படித்ததில் பிடித்தவை (சிரிப்பு – வைரமுத்து கவிதை)

                                         
"ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்.
ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்.
ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்."
                      -    கவிஞர் வைரமுத்து.

No comments:

Post a Comment