*நவ்வாப் பழம்*
“பேருந்துக்குக்
காத்திருக்கையில்
எனக்கு பக்கத்து நபரிடம் பேசும்
கெட்ட
பழக்கம்.
‘வெளுத்த சட்டை பூராவும்
ஒரே
கறையா இருக்கே..?’
என்
கேள்விக்குக் கீழே குனிந்து பார்த்தவர்
கருநீலக்
கறைகளைத் தொட்டுச் சிரித்தார்.
‘காத்துக் காலம் லா…
நவ்வாப்
பழம் உதுந்தது அது’
சட்டையை
மறுபடி நீவிக்கொண்டார்.
நாவல்
பழம் உதிர்கிற
காற்றுக்
காலத்திற்கு
எந்தப்
பேருந்தில் ஏறினால்
உடனே
போகலாம்..?”
*கல்யாண்ஜி*