எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 15 February 2015

காதால் கேட்பதும் பொய்...


“சென்னை
அண்ணாசாலையில்
சிம்சனுக்கும்
LIC நிறுத்தத்துக்கும்
இடையில்
சிக்னலுக்காக நின்ற
மாநகரப்பேருந்தில்
நின்றுக்கொண்டே
அலைப்பேசியில்
பேசுபவர்...
‘நான் LIC தாண்டி
ஆனந்த் ஸ்டாப்ல
இப்ப இறங்கப்போறேன்...
இன்னும் கொஞ்ச
நேரத்தில ஆபீஸ்
வந்துவிடுவேன்..!’
என்றதும்
உட்கார்ந்து பேப்பர்
படித்துக்கொண்டிருந்தவர்
பதறிப்போய் வெளியில்
பார்த்து இன்னும்
LIC வரவில்லை என்று
தெரிந்தப்பின்
சிரித்துக்கொண்டே
அலைபேசியில்
உண்மை பேசியவரை
கவனித்தார்..!

முன் பக்கமாக
பெரியவர் ஒருவர்
‘ஐயோ..! LIC
தாண்டிவிட்டதே..!’
என பரபரப்பாக
பேருந்திலிருந்து
இறங்கியதை
இருவருமே
கவனிக்கவில்லை..!”

- K. அற்புதராஜு.

No comments:

Post a Comment