எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 7 May 2014

குழந்தைகள் நலமா?


“நீண்ட நாட்களுக்கு பிறகு
நண்பர்கள், உறவினர்களை
சந்தித்து நலம் விசாரிக்கும்
போதெல்லாம்...

அவர்களுக்கு மகனா? மகளா?
என்பதில் நாம் குழப்பமடைந்து
பொதுவாக குழந்தைகள் நலமா?
என கேட்கும் போதும்
அவர்கள் ‘குழந்தையா? 
அவர்கள் ஸ்கூல் செல்கிறார்கள்’ 
என்று சொல்லும் போதும், 
நாம் ஒரு அழுத்தமான 
அப்படியா? போட்டு 
சமாளிக்க வேண்டியுள்ளது..!”

                 -     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment