எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 28 May 2014

குருவி சத்தம்










“நகர வீதிகளில்...
குருவிகளின் சத்தம் கேட்டுத்
திரும்பினால்...
அலைப்பேசியில் ஒலிக்கிறது
இளையராஜாவின் இசையில்
சின்னத்தம்பி படத்தில் வரும்
‘போவோமா...ஊர்கோலம்...’
பாடலின் துவக்கத்தில் வரும்
குருவிகளின் சத்தம்..!

சில நகர வீடுகளிலும்...
குருவிகளின் சத்தம் கேட்கும்
அழைப்பான்களின் புண்ணியத்தால்..!

கிராமங்களைப் போல 
மரங்களையோ...குருவிகளையோ...
பார்க்கவே முடிவதில்லை
நகரங்களில்..!”

                   -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment