“அமாவாசை அன்று
திருஷ்டி சுற்றி உடைக்க
நூறு ரூபாய்க்கு
பூசணிக்காய் வாங்கினாள்
குடும்பத்தலைவி.
மாமனார், மாமியார்
வீட்டிலேயே இருப்பார்கள்.
கல்லூரி முடித்து
முதலில் வருவாள்
மகள்.
கணவன் வேலை முடிந்து
எட்டு மணிக்குதான்
வீட்டுக்கு வருவார்.
சாப்ட்வேர் வேலை
மகனுக்கு.
இரவு ஒன்பதோ பத்தோ
ஆகிவிடும் வீடு திரும்ப.
வீட்டிலுள்ள எல்லோரையும்
ஒன்று சேர்த்து
உடைப்பதுதான்
பெரிய வேலை.
இரவில்
பூசணியை உடைக்க
ஆள் தேடுவதும்
சற்றே சிரமம்தான்.
எப்படியோ உடைப்பதற்கு
ஒத்துக்கொண்டார்
பக்கத்துக்கு வீட்டில்
வேலைசெய்யும்
பார்வதி அம்மா.
மகன் வந்தப்பிறகு
எல்லோரையும்
ஒன்றாக நிற்க வைத்து
திருஷ்டி சுற்றி
அந்த பூசணிக்காய்
உடைக்கப்பட்டது
தெருவில்.
தனக்கு கொடுத்த
ஐம்பது ரூபாயில்
காய்கறி கடையில்
பூசணிக்கீற்று ஒன்று
வாங்கி சென்றார்
பார்வதி அம்மா
தன் வீட்டில்
சாம்பார் வைக்க..!”
-
கி. அற்புதராஜு.
Very nice.In 50Rs we can get only get a slice?
ReplyDeleteNice
ReplyDeleteஅருமையான சமுதாயப் பார்வை தங்களுக்கு.
ReplyDeleteநிதர்சன உண்மை
ReplyDelete👍
ReplyDelete🙏
ReplyDelete👍
ReplyDeleteஉண்மை
ReplyDelete🙏
ReplyDeleteSharp on social inequality.
ReplyDelete👍
👏👍🏻👌🏻🙏
ReplyDelete👌
ReplyDeleteGood.
ReplyDelete👍
👏🏻👏🏻👏🏻
ReplyDelete👌👌👌
ReplyDeleteExcellent.
ReplyDelete💐💐🌹
🙏
ReplyDelete👌👌
ReplyDeleteExcellent Sir.
ReplyDeleteமனிதர்களின் ஏற்றம் இறக்கம் நிலை. மாற்ற முடியாத நிலை
ReplyDelete👍👍💐💐
ReplyDeleteஎதார்த்தம்.
Super.
ReplyDelete👍🏻
Amazing sir.
ReplyDelete🙏
ReplyDelete👌👌👌
ReplyDeleteகவிதையின் தலைப்பு
ReplyDelete*இறைவி* மிக அருமை.
குடும்ப தலைவியும்
பார்வதி அம்மாவும்
இரு வேறு குடும்பங்களை
தாங்கி பிடிக்கும்
பெண் கடவுளாக
(இறைவி) சித்தரிக்கிறது
இக்கவிதை.
ஏற்ற தாழ்வுகளை விட
குடும்பங்களின் மீது
குடும்ப தலைவிகளின்
அக்கறை கவிதையை
அழகாக்குகிறது.
சிறப்பு.
சிறப்பு
ReplyDelete👏
ReplyDelete👍
ReplyDelete👏
ReplyDelete😃
ReplyDeleteஅருமை 👌💞👌
ReplyDelete👌
ReplyDeleteNice sir, thank you 🙏
ReplyDeleteஇரு வேறு
ReplyDeleteகுடும்ப தலைவிகளால்
திருஷ்டி சுற்றவும்...
சுற்றிய திருஷ்டியால்
பசியைப் போக்கவும்...
உதவும் பூசணிக்காய்.
கவிதை அருமை.
அருமை. திருஷ்டி பூசணிக்காயை தானம் கொடுத்தால் புண்ணியம்.
ReplyDeleteதெருவில் உடைத்தால் விபத்தால் பாவம் சேரும்.
Reality.
ReplyDelete👍🏻
ReplyDeleteஇவ்வாறு மாதம் ஐந்து முறை அமாவாசை வந்தால், பார்வதி போன்றோர்க்கு உதவியாக இருக்கும்
ReplyDelete