எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 2 July 2016

இறைவி


“அமாவாசை அன்று
திருஷ்டி சுற்றி உடைக்க
நூறு ரூபாய்க்கு
பூசணிக்காய் வாங்கினாள்
குடும்பத்தலைவி.

மாமனார், மாமியார்
வீட்டிலேயே இருப்பார்கள்.
கல்லூரி முடித்து
முதலில் வருவாள்
மகள்.
கணவன் வேலை முடிந்து
எட்டு மணிக்குதான்
வீட்டுக்கு வருவார்.
சாப்ட்வேர் வேலை
மகனுக்கு.
இரவு ஒன்பதோ பத்தோ
ஆகிவிடும் வீடு திரும்ப.

வீட்டிலுள்ள எல்லோரையும்
ஒன்று சேர்த்து உடைப்பதுதான்
பெரிய வேலை.

இரவில்
பூசணியை உடைக்க
ஆள் தேடுவதும்
சற்றே சிரமம்தான்.

எப்படியோ உடைப்பதற்கு
ஒத்துக்கொண்டார்
பக்கத்துக்கு வீட்டில்
வேலைசெய்யும்
பார்வதி அம்மா.

மகன் வந்தப்பிறகு
எல்லோரையும்
ஒன்றாக நிற்க வைத்து
திருஷ்டி சுற்றி
அந்த பூசணிக்காய்
உடைக்கப்பட்டது
தெருவில்.


தனக்கு கொடுத்த
ஐம்பது ரூபாயில்
காய்கறி கடையில்
பூசணிக்கீற்று ஒன்று
வாங்கி சென்றார்
பார்வதி அம்மா
தன் வீட்டில்
சாம்பார் வைக்க..!”

-   கி. அற்புதராஜு.

39 comments:

  1. Very nice.In 50Rs we can get only get a slice?

    ReplyDelete
  2. ஸ்ரீராம்1 December 2020 at 18:31

    அருமையான சமுதாயப் பார்வை தங்களுக்கு.

    ReplyDelete
  3. மோகன்தாஸ் S12 March 2025 at 08:50

    👍

    ReplyDelete
  4. ராஜாராமன்12 March 2025 at 08:51

    🙏

    ReplyDelete
  5. வெங்கடேஷ் பண்டரிநாதன்12 March 2025 at 08:52

    👍

    ReplyDelete
  6. உண்மை

    ReplyDelete
  7. வெங்கடபதி12 March 2025 at 09:04

    🙏

    ReplyDelete
  8. Sharp on social inequality.
    👍

    ReplyDelete
  9. 👏👍🏻👌🏻🙏

    ReplyDelete
  10. நவநீதமூர்த்தி12 March 2025 at 09:31

    👏🏻👏🏻👏🏻

    ReplyDelete
  11. செல்லதுரை12 March 2025 at 09:33

    👌👌👌

    ReplyDelete
  12. Excellent.
    💐💐🌹

    ReplyDelete
  13. சீனிவாசன்12 March 2025 at 09:47

    🙏

    ReplyDelete
  14. ஜெயராமன்12 March 2025 at 09:59

    👌👌

    ReplyDelete
  15. Neerkathalingam12 March 2025 at 10:58

    Excellent Sir.

    ReplyDelete
  16. மனிதர்களின் ஏற்றம் இறக்கம் நிலை. மாற்ற முடியாத நிலை

    ReplyDelete
  17. நரசிம்மன் R.K12 March 2025 at 15:13

    👍👍💐💐
    எதார்த்தம்.

    ReplyDelete
  18. Super.
    👍🏻

    ReplyDelete
  19. Amazing sir.

    ReplyDelete
  20. முருகேசன்12 March 2025 at 15:17

    🙏

    ReplyDelete
  21. இந்திரா12 March 2025 at 15:17

    👌👌👌

    ReplyDelete
  22. பிருந்தா12 March 2025 at 16:53

    கவிதையின் தலைப்பு
    *இறைவி* மிக அருமை.

    குடும்ப தலைவியும்
    பார்வதி அம்மாவும்
    இரு வேறு குடும்பங்களை
    தாங்கி பிடிக்கும்
    பெண் கடவுளாக
    (இறைவி) சித்தரிக்கிறது
    இக்கவிதை.

    ஏற்ற தாழ்வுகளை விட
    குடும்பங்களின் மீது
    குடும்ப தலைவிகளின்
    அக்கறை கவிதையை
    அழகாக்குகிறது.

    சிறப்பு.

    ReplyDelete
  23. சிறப்பு

    ReplyDelete
  24. அருள்ராஜ்12 March 2025 at 18:26

    👏

    ReplyDelete
  25. அம்மையப்பன்12 March 2025 at 18:27

    👍

    ReplyDelete
  26. கலைச்செல்வி12 March 2025 at 18:28

    👏

    ReplyDelete
  27. காஞ்சனா G.K12 March 2025 at 18:28

    😃

    ReplyDelete
  28. கிருஷ்12 March 2025 at 19:11

    அருமை 👌💞👌

    ReplyDelete
  29. தமிழ்செல்வன் R.K12 March 2025 at 21:07

    👌

    ReplyDelete
  30. Nice sir, thank you 🙏

    ReplyDelete
  31. பூர்ணிமா14 March 2025 at 06:03

    இரு வேறு
    குடும்ப தலைவிகளால்
    திருஷ்டி சுற்றவும்...
    சுற்றிய திருஷ்டியால்
    பசியைப் போக்கவும்...
    உதவும் பூசணிக்காய்.

    கவிதை அருமை.

    ReplyDelete
  32. அருமை. திருஷ்டி பூசணிக்காயை தானம் கொடுத்தால் புண்ணியம்.
    தெருவில் உடைத்தால் விபத்தால் பாவம் சேரும்.

    ReplyDelete
  33. செல்வராஜ், துபாய்.15 March 2025 at 14:52

    👍🏻

    ReplyDelete
  34. இவ்வாறு மாதம் ஐந்து முறை அமாவாசை வந்தால், பார்வதி போன்றோர்க்கு உதவியாக இருக்கும்

    ReplyDelete